பொதுவாகவே ஒருவருக்கு இன்னொருவரை பிடித்து விட்டால் அவரை எப்படியாவது ஈர்த்து விட வேண்டும் என்று யோசிப்பர், அதிலும், குறிப்பாக ஆண்கள் இந்த விஷயத்தில் கொஞ்சம் அதிகமாகவே அக்கறை எடுத்துக்கொள்வர்.  “பெண்ணின் மனதே புதிரானது..” என்று டைலாக் விடும் சிலர், அவர்களின் மனதினை புரிந்து கொள்ள கொஞ்சமும் முயற்சி எடுப்பதில்லை என்பதே உண்மை. இங்கு, ஆண்கள் எப்படியிருந்தால் பெண்களுக்கு பிடிக்கும் என்பதை தெரிந்து கொள்வோம் வாங்க. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1.கெமிஸ்ட்ரி முக்கியம் பிகிலு..!


காதலின் ஆரம்ப காலத்தில் இருக்கும் புரிதலையும் பிடித்தத்தையும் கெமிஸ்ட்ரி என்பர். சில ஆண்கள், ஒரு உறவிற்குள் நுழையும் போது ஆரம்பத்தில் இருப்பது போல கடைசி வரை இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு இருக்கும் அந்த பிடித்தம் அல்லது புரிதல் எளிதில் கடந்து போய் விடும். இதனால் பெண்களுக்கு அவர்களை பிடிக்காமல் போகலாம். அதனால், உங்கள் காதல் அல்லது க்ரஷ் உறவில் கெமிஸ்ட்ரியை வளர்த்துக்கொள்வது மிக முக்கியம். காதலை flirting மூலம் வெளிப்படுத்துதல், உங்களுக்கு பிடித்த பெண் குறித்த சிறு சிறு விஷயங்களையும் நினைவில் வைத்திருத்தல் போன்றவை கெமிஸ்ட்ரியை கெடாமல் வைத்திருக்க உதவும். 


2.உணர்வு ரீதியாக வெளிப்படையாக இருத்தல்:


ஆண்கள் என்றாலே அவர்களின் உணர்வுகளை வெளியில் சொல்லக்கூடாது என்பது போன்ற பிம்பத்தை இந்த சமூகம் ஏற்படுத்தி வைத்திருக்கிறது.  “நீ இதை செய்வது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது, இதனால் எனக்கு இது போன்ற உணர்வு ஏற்பட்டது..” போன்ற வாக்கியங்களை உபயோகிக்கும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், இது போன்று அனைவரிடமும் தன் உணர்வுகளை வெளிப்படுத்தி விட கூடாது. பிடித்தவரிடத்தில் மட்டும் தன்னுடைய உணர்வுகள் குறித்து நேர்மையாக இருத்தல் பெண்களை அதிகமாக ஈர்க்கும். 


மேலும் படிக்க | மனைவியிடம் கூறக்கூடாத ‘அந்த’ 5 விஷயங்கள்..! என்னென்ன தெரியுமா..?


3.நிலைத்தன்மை:


தனக்கு எது வேண்டும், எது வேண்டாம் என்று தெளிவாக முடிவெடுக்கும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். உணர்வு ரீதியாக நிலைத்தன்மையுடன் இருப்பவர், நிலையான வருமானம் கொண்டிருப்பவர், உறவில் நிலைத்தன்மை கொண்டிருப்பவர்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும், இது போன்ற ஆண்களை பெண்களுக்கு பிடிக்க காரணம், தன்னை பற்றி இவர் உறுதியுடன் இருக்கிறார் என்ற எண்ணத்தை அவர்களின் மனங்களில் விதைக்கும். 


4.சம உரிமை கொடுப்பது..


பெண்களுக்கு, தனக்கு சம உரிமை கொடுக்கும் ஆண்களை மிகவும் பிடிக்கும். சமூக கட்டமைப்பால், ஆணுக்கு பெண் நிகரானவள் என்பதை பலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால், உறவிலும் சரி, சக வாழ்விலும் சரி பல பிரச்சனைகள் ஏற்படும். தனது உணர்வுகள் மற்றும் தேவைகளுக்கு ஒரு ஆண் எந்த அளவிற்கு உரிமையும் முக்கியத்துவத்தையும் கொடுக்கிறானோ, அதே அளவிற்கான முக்கியத்துவத்தை தனக்கு பிடித்த பெண்களுக்கும் கொடுக்கும் ஆண்களை அனைத்து பெண்களுக்கும் பிடிக்கும். 


5.தன்னம்பிக்கை:


தன்னம்பிக்கையுடன் தனக்கு பிடித்த விஷயங்களை பயமின்றி செய்யும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். தான் செய்யும் விஷயங்கள் எந்த வகையிலான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது தெரிந்து செயல்படும் ஆண்களால் பெண்கள் பெரிதும் ஈர்க்கப்படுவர். மேலும், இதில் தனக்கு திறமை இருக்கிறது என்று தெரிந்து அதன் வழியே பயணித்து வெற்றி பெரும் ஆண்களை பெண்கள் அதிகம் ரசிப்பர். 


6.ஆர்வம்:


ஒரு பெண்ணை பிடித்திருக்கிறது என்றால் பெரும்பாலான ஆண்கள் அவர் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று யோசிப்பர். ஆனால், ஒரு சிலர் ஆரம்ப கட்டத்திலேயே அனைத்தையும் தெரிந்து கொண்டு பின்னர் பிடித்த பெண்ணை கண்டு கொள்ளாமல் விட்டு விடுவர். ஒரு பெண்ணை, ஆணிற்கு பிடித்திருக்கிறது என்றால், அவள் குறித்த விஷயங்களை தெரிந்து கொண்டு அவ்வப்போது அது குறித்து அவளிடம் பேச வேண்டும். உதாரணத்திற்கு, தனக்கு புத்தகம் படிப்பது பிடிக்கும் என்று அந்த பெண் கூறியிருந்தால், அவள் படிக்க விரும்பும் புத்தகத்தை அவளுக்காக வாங்கி கொடுக்கலாம். இது போன்ற சிறு சிறு விஷயங்கள் பெண்களை பெரிதாக கவரும். 


மேலும் படிக்க | தொப்பை தெரியாமல் ஆடை அணிவது எப்படி? இதோ சில ஈசி டிப்ஸ்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ