தமிழில் 2002- ம் ஆண்டு  வெளியான  'மௌனம் பேசியதே' படத்தின் மூலம்  தமிழ் திரையுலகில்  இயக்குனராக அறிமுகமானவர் அமீர்.  பாலா இயக்கிய 'சேது' மற்றும் 'நந்தா' போன்ற படங்களில் துணை இயக்குனராக பணிபுரிந்தார்.  அதன் பின்னர் த்ரில்லர் படமான 'ராம்' படத்தின் மூலம் ரசிகர் மத்தியில் பிரபலமானார்.  அதனையடுத்து 2007-ல் கார்த்தி நடிப்பில் வெளியான 'பருத்திவீரன்' திரைத்துறையில் அமீரின் அந்தஸ்தை உயர்த்தியது.  கார்த்தியின் அறிமுகம் இந்த படத்தில் தான்.  நகைச்சுவை, காதல், சண்டை என பல கோணத்திலும் , மண்வாசனையை கொண்டும் இப்படம் நல்லதொரு வரவேற்பை பெற்று தந்தது.  இந்த படம் பல விருதுகளை வாரி குவித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


இவர் இயக்கிய 'மௌனம் பேசியதே' மற்றும் 'பருத்தி வீரன்' போன்ற படங்களின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நன்கு வரவேற்பினை பெற்று தந்தது.  இந்த இரண்டு படத்திற்கும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமைத்து இருந்தார்.  தமிழ் திரைப்பட இசை கலாச்சாரத்தில் 'ஹிப்ஹாப்'  அறிமுகப்படுத்தியவரே இவர்தான்.  ரீமிக்ஸ்  பாடல்களின் குரு என்று தான் இவரை சொல்ல வேண்டும்.  சமீபகாலமாக பலரது மொபைல்களின் ப்ளேலிஸ்ட் முழுக்க இவரது பாடல் தான் ஒலித்து கொண்டு இருக்கின்றது.


இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்குனர் அமீர் மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோரின் வெற்றி கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்து தமிழ் திரையுலகை கலக்க போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.


ALSO READ பாலா படத்தில் இரண்டு வேடத்தில் நடிக்கும் சூர்யா!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR