Bigg Boss 7 Tamil Saravana Vickram: சமீபத்தில் பரபரப்பாக நடந்து முடிந்த நிகழ்ச்சி, பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் அதிகம் கவனம் ஈர்த்த போட்டியாளராக இருந்த சரவண விக்ரம். போட்டி முடிந்து இரண்டு வாரங்கள் முடிந்த நிலையிலும் இது குறித்து இன்னும் பலர் பேசி வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிக்பாஸ் 7:


இந்தியில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருப்பது, பிக்பாஸ் சீசன் 7. இதனை தமிழ் உள்பட பிற தென்னிந்திய மொழிகளிலும் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் நடைப்பெற்று வருகிறது. தமிழில், கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதன் 7வது சீசன், கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. 106 நாட்களுக்கு பிறகு இந்நிகழ்ச்சி முடிவடைந்தது தொடர்ந்து, இதன் டைட்டிலை வி.ஜே.அர்ச்சனா வென்றார். ரன்னர் அப் பட்டத்தை மணிச்சந்திரா வென்றார். 


சரவண விக்ரம்:


இளம் சின்னத்திரை நடிகர்களுள் ஒருவரான சரவண விக்ரம், ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் மூலம் பிரபலமானார். பிக்பாஸில் முக்கிய போட்டியாளர்களுள் ஒருவராக இருந்தவர், விக்ரம். இவர், பிக்பாஸில் இருந்த போது ஒரு முறை கேமரா முன் நின்று “பிக்பாஸ் டைட்டில் வின்னர் சரவண விக்ரம்” என்று பேசினார். இது, ரசிகர்களிடையே ட்ரோல் மெட்டீரியலாக மாறியது. இதையடுத்து, இவருக்கு வந்த ஆதரவுகளை விட வெறுப்புகள் நெருப்பாய் உமிழ ஆரம்பித்தன. 


மேலும் படிக்க | 'கேப்டன் மில்லர் அப்பட்டமான திருட்டு... நாவலில் இருந்து கதை அப்படியே காப்பி' - அதிர்ச்சி தகவல்


நடிப்பை விட்டு விலகும் சரவண விக்ரம்? 


சரவண விக்ரம், சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவினை வெளியிட்டிருந்தார். அதில், “நான் எனது தொழிலை விட்டு விலகுகிறேன்” என்று ஒரு பதிவினை வெளியிட்டிருந்தார். இதையடுத்து இந்த பதிவை அவர் நீக்கி விட்டார். ஆனால் அதற்குள் அதை ஸ்கிரீன் ஷாட் எடுத்த நெட்டிசன்கள், அதை ட்விட்ரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். 


எதனால் இந்த பதிவு? 


சரவண விக்ரம், பிக்பாஸ் இல்லத்தில் இருந்த போது அவரது குடும்பத்தினர் ஒரு எபிசோடில் கலந்து கொண்டனர். அப்போது, அனைவரும் மாயாவை நம்பாதே என்று கூறிவிட்டு சென்றனர். அவரது தங்கை வந்த போதும் இதையே கூறிவிட்டு சென்றார். இதையடுத்து, விக்ரமன் மாயாவிடம் பேசுவதையோ அவருடன் சுற்றுவதையோ தவிர்த்தார். இதையடுத்து கோபமான மாயா, சரவண விக்ரம் எவிக்ட் ஆன போது கூட, அவரை சரியாக வழியனுப்பவில்லை. இதையடுத்து, பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சி நெருங்கிய போது முன்னாள் போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் இல்லத்திற்குல் நுழையும் நிகழ்வு நடைப்பெற்றது. அப்போது மாயாவிடம் மன்னிப்பு கேட்ட விக்ரம், அவருடன் வெளியில் வந்தவுடனும் நட்புடன் பழகினார். இந்த விஷயம் விக்ரமின் குடும்பத்தாரை கோபத்திற்குள்ளாக்கியது. இதையடுத்து, அவரும் விக்ரமனுக்கு மறைமுகமாக தனது பதிவினில் தெரிவித்தார். 


நெட்டிசன்களின் பிடியில் விக்ரம்..


நடிகர் சரவண விக்ரமை பிக்பாஸ் போட்டியின் ஆரம்பத்தில் இருந்து ட்ரோல்கள் பரவியது. இவர், தனது குடும்பத்தாரின் வெறுப்பை சம்பாதித்ததும் நெட்டிசன்களின் கேலிக்குள்ளானதற்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. அது மட்டுமன்றி, மாயாவை பெரும்பாலான மக்களுக்கு பிடிக்கவில்லை. இவர், மாயாவுடைய நெருங்கிய நண்பராக இருப்பதாலும் நெட்டிசன்கள் அவரை நொங்கெடுத்து வருகின்றனர். இவர் “என் துறையில் இருந்து விலகுகிறேன்” என்று கூறிய பிறகும், பலர் இவரை கேலிக்குள்ளானவராக மாற்றி மீம்ஸ் போட்டு வருகின்றனர். 


மேலும் படிக்க | பார்த்திபன் இயக்கும் புதிய படம்! இந்த முறை என்ன ஜானர் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ