பிக் பாஸ் 4 (Bigg Boss Tamilஇன் மூன்றாவது விளம்பரத்தில் வழக்கு விசாரணை நடைபெறுகிறது, இது சனம் ஷெட்டிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு. முன்னதாக பாலாஜி மீது புகார் அளித்த போட்டியாளர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்றைய புரோமோவில், பிக்பாஸ் வீடு விவாத மேடையாக மாறுவதை பார்த்தோம். சனம் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தியின் பிரச்சனை குறித்து விவாதிக்கப்படுகிறது. சனத்திற்கு ஆதரவாக, பாலாஜி, ஆரி, ரம்யா ஆகியோர் வந்து நிற்கிறார்கள். சுரேஷ் சக்ரவர்திக்கு ஆதரவாக, அர்ச்சனா, ரியோ, ஷிவானி, சம்யுக்தா  உள்ளிட்டோர் நிற்கிறார்கள். 


 


ALSO READ | இந்த வாரம் எலிமினேஷனில் இடம் பிடித்த போட்டியாளர்கள் இவர்களே...


சுரேஷ், சனம் எப்போதும் ஒருவர் பேசும் போது மூக்கை நுழைகிறார் என அவர் மீது குற்றம் சொல்கிறார். இதற்க்கு சனத்தின் தரப்பில் இருந்து பாலாஜி, எதுவுமே பேசவில்லை என்றால் அவங்களை ஸ்டாப் பண்ணுவது போல் இருப்பதாக தெரிவிக்கிறார். இதற்கு ஷிவானி ஆரி பேசும் போது நீங்கள் ஸ்டாப் பண்ண சொன்னீர்கள் என தெரிவிக்கிறார்.


ஆச்சரியம் என்னவென்றால், பாலாஜி சனத்திற்கு ஆதரவாக வந்ததே. இந்த பரோமோவின் இறுதியில் சுசித்ரா தனது தீர்ப்பை சனத்திற்கு ஆதரவாக அளிக்கிறார். சுரேஷ் சக்ரவர்த்தி தனது வாயை மூடிக்கொண்டிருக்கிறார், அதே நேரத்தில் சனம் பாலாஜிக்கு ஆதரவளித்ததற்கு நன்றி தெரிவித்தாலும் "நீங்கள் வரவேற்கப்படவில்லை" என்று பதிலளித்தார். 


 


ALSO READ | Bigg Boss Tamil 4 இன்றைய பரோமோ: ஆரி , சம்யூக்தா இடையே கடும் வாக்குவாதம்...


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR