வித்தியாசமான கதைக்களத்தில் படங்களை உருவாக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் தான் இயக்குனர் செல்வராகவன்.  துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை போன்ற வித்தியாசமான படங்களை தமிழ் திரையுலகிற்கு கொடுத்ததன் மூலம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


'காதல் கொண்டேன்' படத்தில் சோனியா அகர்வாலை அறிமுகப்படுத்திய இவர், அவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  பின்னர் இவர்களுக்குள் ஏற்பட்ட சில கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்தவர், தன்னிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கீதாஞ்சலி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இவர் தற்போது  நடிகர் விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' படத்திலும், கீர்த்தி சுரேஷுடன் 'சாணிக்காயிதம்' என்ற படத்திலும் நடித்து வருகிறார்.   சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது பல புரியாத பதிவுகளை பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகுவார்.  அந்த வகையில் தற்போது அறிவுரை கூறும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை ட்வீட் செய்துள்ளார்.


 



அதாவது, "தயவு செய்து வேதனையின் உச்சத்தில் இருக்கும்போது எந்த முடிவும் எடுக்காதீர்கள்.   இரண்டு நாட்கள் கழித்து யோசிப்போம் என்று விட்டுவிட்டு நன்கு உணவருந்தி ஓய்வெடுங்கள்.  இரண்டு நாட்களுக்கு பிறகு ஒன்று பிரச்சனையே இருக்காது இல்லை நீங்கள் முடிவெடுக்கும் மனநிலையில் இருப்பீர்கள்" என்று ட்வீட் செய்துள்ளார்.  இதனை பார்த்த ரசிகர்கள் எதற்காக இந்த பதிவு? என்று சற்று குழம்பி போய் இருக்கின்றனர்.


ALSO READ 4 வருடங்கள் கழித்து மீண்டும் தமிழில் அனுஷ்கா!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR