இயக்குனர் சங்கர் (Shankar) இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர். இவருடைய படங்கள் அவற்றின் தொழில்நுட்ப அருமை, பிரம்மாண்டம், அதிரடியான சமூக மாற்றக் கருத்துக்களுக்காகப் பேசப்படுகின்றன. இயக்குனர் சங்கர் தனது படங்களுக்கு கதாநாயகனைத் தேர்ந்தெடுப்பதில் அதிகம் கவனம் செலுத்துவார். மேலும் பல நடிகர்கள் இவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வம் கொள்வார்கள். சங்கரின் படங்கள் வெகுஜனங்களால் போற்றப்பட்டன, அந்தவகையில் இவரது இயக்கத்தில் அர்ஜுன் நடித்த 'முதல்வன்' இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் 'முதல்வன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் (Vijay) ஏன் மறுத்துவிட்டார் என்பதை இயக்குனர் சங்கர் வெளிப்படுத்தி உள்ளார். 


 


ALSO READ | விரைவில் தொடங்குகிறது ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு பணிகள்....


இயக்குனர் சங்கரின் 'முதல்வன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்திற்கு விஜய் முதல் தேர்வாக இருந்தார். ஆனால் விஜய் நடிக்க மறுத்துவிட்டார். விஜய் நடிக்க மறுத்தது ஏன் என்பதை இயக் குனர் ஷங்கர் தெரிவித்திருக்கிறார். முதல்வன் படத்திற்காக விஜய்யை நடிக்க சங்கர் தனது குரு மற்றும் விஜய் யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரை தனக்கு தெரிந்தவர் மூலம் அணுகினார், ஆனால் இருதரப்பிலுமான பேச்சு வார்த்தை சரியாக நடக்கவில்லை. பின்னர் எஸ்.ஏ. சந்திரசேகர் தனது மகன் சிறந்த வாய்ப்பை இழந்ததைப் பற்றி கவலைப்பட்டார்.


ஷங்கர் விஜய்யிடம் நேரடையாக பேசி இருக்க வேண்டும் என்று சந்திரசேகர் பின்னர் சங்கர் ரிடம் தெரிவித்தாராம். ஆனாலும் மெகாஹித் இந்தி திரைப்படமான '3 Idiots' இன் இந்தி ரீமேக்கான 'Nanban' படத்தில் விஜய் பின்னர் இயக்குனர் சங்கருடன் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.


 


ALSO READ | உலக நாயகன் கமலுக்கு பிறகு Bigg Boss நிகழ்ச்சியில் பங்கேற்கும் தளபதி விஜய்?