சென்னை: பிரபல தொலைக்காட்சி சின்னத்திரை நடிகை சித்ரா புதன்கிழமை அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்துக்ககொண்டார். அவரது மரணம் ரசிகர்களையும் அவரது நண்பர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


நேற்று அதிகாலை சின்னத்திரை நடிகை சித்ரா (Actress chitraதான் தங்கியிருந்த ஓட்டலில் தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவருடன் ஹேமந்த் என்பவர் இருந்தார் என்பதும், இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கப் போவதாக கூறப்படுகிறது. ஆனால் போலீசார் விசாரணையில் ஏற்கனவே தாங்கள் இருவருக்கும் பதிவு திருமணம் செய்துவிட்டதாக விசாரணையில் ஹேமந்த் (Hemanth Kumarகூறியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 


ALSO READ | சித்ரா மரணம்! போலீஸில் ஹேம்நாத் கூறிய திடுக் தகவல்!


இதற்கிடையில் சித்ராவின் மரணம் குறித்த விசாரணையில் நசரத்பேட்டை போலீஸார் ஈடுபட்டுள்ளனர். அதோடு சித்ரா முகத்தில் உள்ள காயங்கள் எதனால் ஏற்பட்டது என்றும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். 


இந்நிலையில் அவரது உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது என்றும், உடல் பிரேதப் பரிசோதனை செய்து முடிக்கப்பட்டவுடன் சித்ராவின் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.



ALSO READ | Instagram இல் வைரலாகும் நடிகர் சித்ராவின் கடைசி வீடியோ!


சித்ரா உண்மையில் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரது உடலில் ஆணி அடையாளங்கள் அவளுடையது என்றும் பிரேத பரிசோதனை அறிக்கை முடிவு செய்துள்ளது. அவர் இந்த முடிவை எடுப்பதற்கான காரணத்தை விசாரிக்க காவல்துறை இப்போது முடிவு செய்துள்ளது. 


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR