கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் படத்தின் வெற்றியினை தொடர்ந்து பல மாதங்களுக்கு முன்னர் இயக்குனர் ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து இந்தியன்-2 படத்தை இயக்க திட்டமிட்டனர்.  ஆனால் ப்ரொடக்ஷன் பணிகளில் ஏற்பட்ட தொய்வு காரணமாக படத்தின் பணிகள் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக கிடப்பில் போடப்பட்டது.  இந்த படம் கைவிடப்பட்டுவிட்டதோ என்று நினைத்த நிலையில் தற்போது படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்போவதாக படக்குழு அறிவித்துள்ளது, இந்த படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


அடுத்ததாக கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த 2017ம் ஆண்டில் நியூயார்க்கில் துருவ நட்சத்திரம் படம் தொடங்கப்பட்டது.  படத்தின் டீசரையும் படக்குழு வெளியிட்ட பின்னர் சில காரணங்களால் இப்படத்தில் முதலில் கதாநாயகியாக ஒப்பந்தமான அணு இம்மானுவேல் படத்திலிருந்து விலக பின்னர் ரீது வர்மா இந்த திட்டத்தில் இணைந்தார்.  அதனை தொடர்ந்து பல காரணங்களால் தடைபட்ட இந்த படத்தின் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது.



மேலும் படிக்க | கோப்ரா எப்படி பட்ட படம்? விளக்கம் கொடுத்த விக்ரம்!


வெங்கட் பிரபு மற்றும் சிலம்பரசன் ஆகியோர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் ஒரு பெரிய திட்டத்தில் இணையவுள்ளதாக 2018ல் அறிவித்தனர்.  ஆனால் சிம்பு சரியான ஒத்துழைப்பு கொடுக்காததால், தயாரிப்பாளர் படத்தை நிறுத்துவதாக கூறினார்.  பின்னர் ஆத்திரமடைந்த சிம்பு கடந்த 2019ல் மகாமாநாடு என்கிற படத்தை இயக்குவதாக அறிவித்தார், பிறகு தயாரிப்பாளர் மற்றும் சிம்புவுக்கு இடையே சமரசம் ஏற்பட்டு மாநாடு படத்தை வெற்றிகரமாக முடித்து திரையில் வெளியிடப்பட்டு படம் நல்ல வரவேற்பை பெற்றது.  



கமல்ஹாசன் நடிப்பில் 2013ம் ஆண்டில் வெளியாகி வெற்றிநடைபோட்ட விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தை உடனடியாக உருவாக்க இருப்பதாக கமல் தெரிவித்திருந்தார்.  தாய்லாந்தில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற போவதாக கூறப்பட்டது, முதல் பாகம் எடுக்கும்போதே படத்தின் பணிகளை 40% முடித்த பின்னர் பொருளாதார நெருக்கடியால் படத்தின் பணியில் தொய்வு ஏற்பட்டது.  ஆரம்பத்தில் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படத்தை தயாரித்த கமல் பின்னர் நிதி சிக்கல்களை சமாளிக்க ஆஸ்கார் ரவிச்சந்திரனுடன் இணைந்தார்.  2014ல் வெளியிட திட்டமிட்ட இந்த படம் பல போராட்டங்களுக்கு பிறகு ஒருவழியாக 2018ல் வெளியாகி வெற்றிபெற்றது.  



அடுத்ததாக 'வில்லன்' படத்தின் வெற்றிக்கு பின்னர் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் அஜித் கூட்டணியில் 'வரலாறு' படம் 2004ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.  இப்படத்தில் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஒளிப்பதிவாளராக பி.சி.ஸ்ரீராம் போன்ற பிரபலமானவர்களை ஒப்பந்தம் செய்தனர்.  ஆனால் படத்தின் தயாரிப்புக்குழுவான என்.ஐ.சி ஆர்ட்ஸ் நிறுவனத்திற்கு ஏற்பட்ட நிதி சிக்கல்களாலும், அஜித் மற்றும் தயாரிப்பாளர் இடையே ஏற்பட்ட மோதலாலும் படம் கிடப்பில் போடப்பட்டது.  படத்தில் ஏற்பட்ட தொய்வு காரணமாக பி.சி.ஸ்ரீராம் இதிலிருந்து விலக மேலும் படத்திற்கு நெருக்கடி ஏற்பட்டது.  அதன்பின்னர் ஆனந்தா பிக்சர்ஸ் விநியோகஸ்தர் சுரேஷ் நிதியுதவி செய்து படம் 2006ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது.


மேலும் படிக்க | விடுதலை படத்தில் வெற்றிமாறனுடன் இணைந்த மற்றொறு இயக்குனர்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ