ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலாமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில், ஐஸ்வர்யா தீபாவின் சாப்பாட்டு தட்டை தட்டி விட்டு பிரச்சனை செய்தார். தீபா சாப்பிட்டாளா இல்லையா என்பது தெரியவில்லை. இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கார்த்திகை தீபம் சீரியல் இன்றைய எபிசோட் 


வீட்டில் அமர்ந்து தீபா  யோசித்து கொண்டிருக்க, கார்த்திக் ஒரு கோவிலில் அமர்ந்து மனதில் அசைப் போட்டுக் கொண்டிருக்கிறார். நான் இங்க எப்படி வந்தேன்னு தெரியல, எல்லாத்துக்கும் காரணம் சிவா தான் என்று தீபா சொன்னது, தீபா மீது தவறு இருக்க வாய்ப்பில்லை என்று தனது நண்பன் சொல்லியது என பலவற்றையும் நினைத்து, அலசிப் பார்த்துக் கொண்டிருக்கிறார் கார்த்திக்.  



மனதில் பலவிதமான சிந்தனைகள்  ஓடிக் கொண்டிருக்கும் அந்த சமயம் பார்த்து அங்கு வரும் ஒருவர், என்ன நீங்க இங்க இருக்கீங்க? என்னுடைய பொண்ணுக்கு இன்று இந்த கோவிலில் கல்யாணம், உங்களுக்கு இதே தேதியில் கல்யாணம் என்பதால் உங்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தான் கூப்பிடவில்லை. இப்போது நீங்க இங்க இருக்கீங்க, அதனால உங்க கையால தாலி எடுத்து கொடுங்க என்று கேட்டுக் கொள்கிறார்.


மேலும் படிக்க | வீட்டுக்குள்ள வந்துட்டதால என்னுடைய மருமகளா ஆகிட முடியாது! சவால் விடும் அபிராமி


தாலி எடுத்துக் கொடுக்க மறுக்கும் கார்த்திக்


தாலி எடுத்துக் கொடுக்கும் அளவுக்கு நான் பெரியவன் இல்லை, நான் சின்ன பையன் என்று மறுப்பு சொல்கிறான் கார்த்திக். அதன் பிறகு அந்த நபர் கார்த்தியை சமாதானம் செய்து கூட்டி செல்கிறார்.  இறுதியில், திருமணத்திற்கு கார்த்திக் தாலி எடுத்து கொடுக்க, கோவிலில் திருமணம் நடக்கிறது, திருமணத்தைப் பார்க்கும் கார்த்திக்கு கல்யாணத்தில் தீபா கழுத்தில் தாலி கட்டிய நினைவுகள் மனதை உலுக்குகிறது. 


மறுபுறம், வீட்டில் தீபா உட்கார்ந்திருக்கும் இடத்திற்கு வேலைக்காரியுடன் வரும் ஐஸ்வர்யா ஒரு பாயையும் தலையணையும் தூக்கி போட்டு இனிமே நீ இந்த படிக்கட்டு கீழே தான் படுக்கணும் என ஆர்டர் போடுகிறாள். ஐஸ்வர்யாவை எதிர்த்து மீனாட்சி  சண்டை போடுகிறாள். பிறகு தீபா வேறு வழி இல்லாமல் அந்த படிக்கட்டு கீழே படுத்து கொள்கிறாள்.


இந்த சமயம் பார்த்து கார்த்திக் வீட்டுக்கு வர என்ன இங்க படுத்துட்டு இருக்கீங்க என்று கேட்கிறார். அதற்கு, நான் இங்கேயே இருக்கிறேன் என்று சொல்கிறாள். ஏதோ தவறு நடந்திருக்கிறது என்பதைப் புரிந்துக் கொண்ட கார்த்திக், யாரவது எதாவது சொன்னாங்களா என்று கேட்கிறார்.



ஆனால், யாரும் எதுவும் சொல்லவில்லை என்று தீபா சமாளிக்கிறாள். அனால் அங்கு வரும் மீனாட்சி ஐஸ்வர்யா செய்த வேலைகளை எல்லாம் சொல்லிவிடுகிறார். கார்த்திக் ஐஸ்வர்யாவை கூப்பிட்டு கோபத்தில் திட்டுகிறார். 


இதையெல்லாம் நீங்க முடிவு பண்ணாதீங்க, நான் அம்மா கிட்ட பேசிக்கறேன் என்று சொல்லி அபிராமியிடம் பேச அவள் கிச்சன், பூஜையறைக்குள் மட்டும் அவ நுழையக் கூடாது, மற்றபடி அவ இங்க இருக்க ஏதோ ஒரு ரூம்ல தங்குறதுல எனக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று சொல்ல கார்த்திக் தீபாவை ஒரு ரூமில் தங்க வைக்கிறான். 


தனிமையில் இருக்கும் தீபாவின் முன், அவளது மனசாட்சி தோன்றி இது எல்லாம் விதியின் விளையாட்டு, உன் மேல எந்த தவறும் இல்லை என்று சொல்லி சமாதானப்படுத்துகிறது.. கூடிய சீக்கிரம் கார்த்திக் உன்னை ஏத்துப்பார் எனவும் சொல்லி மனசாட்சி மறைகிறது.


மனசாட்சி சொன்னது நடக்குமா? அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


மேலும் படிக்க | மைண்ட் வாய்ஸ்னு நினைச்சு ஓபனா பேசினா என்னவாகும்? கார்த்திகை தீபம் சீரியலைப் பாருங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ