ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலாமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் தீபா வெளியே நின்று கொண்டிருக்க அபிராமி வீட்டிற்குள் பழைய விசயங்களை நினைத்து பார்த்து மயங்கி விழுந்தாள். இதனை தொடர்ந்து இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கார்த்திகை தீபம் சீரியல் இன்றைய எபிசோட்


அதாவது,அபிராமி மயங்கி விழ வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் பதற்றம் அடைகின்றனர், அதன் பிறகு டாக்டரை அழைத்து வந்து அபிராமிக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்க வைக்கின்றனர். பிறகு ஐஸ்வர்யா வெளியே வந்து உன் ராசி ரொம்ப நல்ல ராசி, நீ வந்த நேரம் அத்தைக்கு இப்படி ஆகிருச்சு என தீபாவிடம் கோபத்தோடு பேசி விட்டு செல்கிறாள். 



இதனை தொடர்ந்து டாக்டர் அபிராமிக்கு பிரச்சனை எதுவும் இல்லை, சாதாரண மயக்கம் தான் என சொல்ல எல்லோரும் நிம்மதி அடைய மீனாட்சி இந்த விசயத்தை தீபாவிற்கு தெரியப்படுத்த தீபா என்னால தான் அத்தைக்கு இப்படி ஆகிருச்சு, நான் கிளம்பறேன் என்று சொல்ல மீனாட்சி இதெல்லாம் எதிர்பாராமல் நடந்தது, அதுக்கு நீ என்ன பண்ணுவ என சமாதானம் செய்கிறாள். 


மேலும் படிக்க | சீதா ராமன் அப்டேட்: கைதாகும் சூர்யா.. அதிர்ச்சியில் சீதா, ஆட்டத்தை தொடங்கும் மகா!!


பிறகு கண் விழிக்கும் அபிராமி தீபா பற்றி கேட்க அவள் வெளியே காத்து கொண்டிருக்கும் விசயத்தை சொல்லி ஐஸ்வர்யா ஏற்றி விட முயற்சி செய்ய செல்பி பாட்டி திட்டி அடக்குகிறார். பிறகு கார்த்திக் அபிராமியிடம் தனியாக பேச வேண்டும் என சொல்லி எல்லாரையும் வெளியே அனுப்புகிறான். 


பிறகு தெரியாமல் தான் தீபா கழுத்தில் தாலி கட்டினேன், நீங்க உங்க கையால எடுத்து கொடுத்த தாலி தான் தீபா கழுத்துல இருக்கு, நீங்க எவ்வளோ பேருக்கு தாலி எடுத்து கொடுத்து கல்யாணம் நடத்தி வச்சிருக்கீங்க, அப்படி இருக்கும் போது உங்க கையால் ஏறுன தாலி இறங்க கூடாது என தீபாவுக்கு ஆதரவாக பேசுகிறான், இனிமே நீங்க உங்க முடிவை சொல்லுங்க அதன்படியே நான் நடக்கிறேன் என சொல்ல அபிராமி யோசிக்கிறாள். 


இந்த சமயம் வெளியே மழை பெய்ய தீபா நனைந்தபடி நிற்க கார்த்திக் குடையுடன் வந்து தீபாவை உள்ளே அழைத்து செல்ல அபிராமி இதை கொஞ்சமும் பிடிக்காமல் பார்க்கிறாள். 


மேலும் படிக்க |  தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் இணைந்த அருண்ராஜா காமராஜ்


உடலின் நிறத்தை மையமாகக் கொண்டு பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையை சந்திக்கும் தீபாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு கார்த்திகை தீபம் சீரியலின் கதை அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு திறமைகள் இருந்தாலும், குயில் போல பாடும் அழகான குரலும், திறமையும் இருந்தாலும்,  தன்னுடைய நிறத்தால் தீபா தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகிறார்.


திடீரென எதிர்பாராத சூழ்நிலையில் தீபா மிகப்பெரிய நிறுவனத்தின் சிஇஓவான கார்த்திக்கை திருமணம் செய்கிறார். அதன் பிறகு தீபாவின் வாழ்க்கை என்னவாகிறது? தீபாவின் கனவுகள் நனவாகுமா? தீபா, கார்த்திகை தீபமாக ஒளிர்வாரா? 


அடுத்ததாக நடக்க போவது என்ன என்ற ஆர்வத்தைத் தூண்டும் கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


மேலும் படிக்க | சீதா ராமன் அப்டேட்: மதுமிதாவை மீட்ட மகா.‌. சீதா விடும் சவால் - இன்றைய எபிசோட் அப்டேட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ