கார்த்திகை தீபம் அக்டோபர் 31 எபிசோட்: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம் தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஐஸ்வர்யா பாட்டு போட்டி பற்றி கொளுத்தி போட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதாவது பரமேஸ்வரி பாட்டி தீபாவுக்கு மலருக்கும் பாட்டு போட்டி நடத்த போவதாக சொல்ல தீபா நம்ம பாடினால் கார்த்திக்கு பல்லவி நான் தான் என்ற உண்மை தெரிந்து விடும் என தயங்குகிறாள். அபிராமி இவளுக்கு பாட்டு பாட வராதே என நினைத்து கொண்டு என்ன செய்வது என தவிக்கிறாள். 


மேலும் படிக்க | ரஜினி - லோகேஷ் படம் குறித்து முக்கிய அப்டேட் சொன்ன மனோஜ் பரமஹம்சா!


இருந்தாலும் தீபாவை விட்டு கொடுக்கலாம் சமையலயே நீ அசத்திட்ட, உன்னால் பாட்டும் பாட முடியும், ஒருநாள் நல்லா பிராக்டிஸ் பண்ணிட்டு பாடு என்று சொல்ல தீபா மறுப்பு தெரிவிக்க முடியாமல் சம்மதம் சொல்கிறாள்.



அதன் பிறகு மலர் கார்த்தியிடம் தனியாக பேச ஆசைப்பட்டு முத்து பட பட பாணியில் ஒரு பேப்பரில் இரவு 10 மணிக்கு தன்னை தோட்டத்தில் தனியாக சந்திக்கவும் முக்கியமான விஷயம் பேச வேண்டும் என எழுதி தூக்கி போட அதை ஐஸ்வர்யா எடுத்து படித்து அருண் எழுதியதாக நினைத்து கொண்டு தூக்கி போட அருண் அதை எடுத்து படித்து ஐஸ்வர்யா எழுதியதாக நினைத்து கொள்கிறான். 


மேலும் படிக்க | ஐஸ்வர்யாவின் அடுத்த சதி திட்டம் ரெடி - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!


இப்படி இந்த லெட்டர் எல்லாரிடமும் வலம் வந்து கார்த்தியின் மீதும் விழ அவன் தீபா என்று நினைத்து கொள்ள அந்த நேரம் பார்த்து பாட்டி வந்ததும் அதை தீபா மீது தூக்கி போடுகிறான். அடுத்து, இன்றைய கார்த்திகை தீபம் சீரியலில் தீபா கார்த்திக் எதோ பேச ஆசைப்படுவதாக புரிந்து கொள்ள கடைசியாக அந்த லெட்டர் பரமேஸ்வரி பாட்டி கையில் சிக்கி விடுகிறது. இதை படித்து பார்த்த பாட்டி கடுப்பாகிறார். 


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


மேலும் படிக்க | லியோ படத்தின் வெற்றி விழா - காவல்துறை சொன்ன முக்கிய தகவல்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ