Sivakarthikeyan Third Son Name : நடிகர் சிவகார்த்திகேயனுக்கு, கடந்த ஜூன் மாதம் மூன்றாவது ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், தன் மகனுக்கு பெயர் சூட்டு விழா நடத்தி இருக்கிறார் சிவகார்த்திகேயன். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெயர் சூட்டு விழா:


தனது முறைப்பெண்ணையே சினிமாவிற்கு வருவதற்கு முன்பு திருமணம் செய்து கொண்ட சிவகார்த்திகேயன், அதன் பின்புதான் திரையுலகில் கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பித்தார். சிவகார்த்திகேயன்-ஆர்த்தி தம்பதியனருக்கு ஆராதனா என்ற முதல் பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து சில வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு குகன் என்ற மகன் பிறந்தான். இந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் தங்களுக்கு மூன்றாவது மகன் பிறந்திருப்பதாக சிவகார்த்திகேயன் அறிவித்திருந்தார். தற்போது தன் மகனுக்கு பெயர் சூட்டு விழா நடத்தி இருக்கும் அவர் அது குறித்த வீடியோவையும் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருக்கிறார். 



இந்த குழந்தைக்கு ‘பவன்’ என்று பெயரிட்டிருக்கின்றனர். இதையடுத்து, சிவகார்த்திகேயனின் குடும்பத்தினருக்கு ரசிகர்கள் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.


மேலும் படிக்க | சிவகார்த்திகேயனின் சொத்து மதிப்பு எவ்வளவு கோடி தெரியுமா?


க்யூட் குடும்பம்!


தமிழ் திரையுலகில் இருக்கும் நடிகர்களில், வெகு சிலர் மட்டுமே இரண்டிற்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொள்கின்றனர். சிவகார்த்திகேயனின் மூன்றாவது குழந்தை குறித்த அறிவிப்பு வெளியான போது அனைவருக்கும் ஷாக் ஆகத்தான் செய்தனர். சிவகார்த்திகேயன் வீட்டில் நடந்த பெயர் சூட்டு விழாவின் சமீபத்திய வீடியோவை பார்க்கையில், அதில் அவர்கள் குடும்பம் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர் என்பது தெளிவாக தெரிகிறது.


அந்த வீடியோவில் சிவகார்த்திகேயன் தனது மகளை பார்த்து பூரித்து சிரிக்கும் தருணம், இரண்டாவது மகன் குகன் வந்திருப்பவர்களை கையெடுத்து கும்பிட்டு வரவேற்பது-செல்ல சேட்டைகள் செய்வது, குழந்தையை சிவகார்த்திகேயன் கைகளில் ஏந்தி காதில் பெயரை கூறுவது உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இதைப்பார்த்த சில ரசிகர்கள் ஆனந்த கண்ணீரில் மிதந்ததாக கமெண்டுகளில் தெரிவித்து வருகின்றனர். இந்த க்யூட் குடும்பத்தை பலரும் வாழ்த்தியும் வருகின்றனர். 


மனைவிக்கு ஸ்பெஷல் மெசஜ்!


நடிகர் சிவகார்த்திகேயன், இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் வீடியோவில் தனது மனைவி ஆர்த்திக்காக ஸ்பெஷலான மெசஜை கேப்ஷனாக எழுதியிருக்கிறார். 


"அன்பு ஆர்த்திக்கு,


அறுவை சிகிச்சை அறையில் நான் உன்னுடன்தான் இருந்தேன். குழந்தைகளை பெற்றெடுக்க நீ எவ்வளவு சிரமப்பட்டாய் என்பதை நானும் அறிவேன். இவ்வளவு வலிகளை தாங்கிக்கொண்டு நம் குடும்பத்தை பெரிதாக்கி என் உலகை அழகாக மாற்றியதற்கு நன்றி. லவ் யூ" 


என்று குறிப்பிட்டிருக்கிறார். 


சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படங்கள்:


பிரின்ஸ், அயலான் படங்கள் கடும் தோல்வியுற்ற நிலையில் அடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கும் அமரன் படத்தில் நடித்தார் சிவகார்த்திகேயன். ‘புல்வாமா’ தாக்குதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் அவருடன் இணைந்து சாய் பல்லவி நடித்திருக்கிறார். உண்மை சம்பவத்தில் உயிரிழந்த மேஜர் முகுந்த் கதாப்பாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். இதையடுத்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ஒரு படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தின் பணிகள் விருவிருப்பாக நடைப்பெற்று வருகிறது. அடுத்து, சுதா கொங்கரா இயக்கும் ஒரு படத்திலும் இவர் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. 


மேலும் படிக்க | மகனின் புகைப்படத்தை வெளியிட்ட சிவகார்த்திகேயன்! வைரல் போட்டோஸ்..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ