Actress Charge 5 Crores For An Ad Film : உலக சினிமாவை எடுத்துக்கொண்டாலே நடிகர்களுக்கு இணையாக, நடிகைகளுக்கு சம்பளம் வழங்கப்படுவதில்லை என்பது அனைவருக்கும் தெரியும். இந்திய திரையுலகை பற்றி கேட்கவே வேண்டாம். ஆனால், இங்கும் பல நடிகைகள் கோடிக்கணக்கில்தான் சம்பளம் வாங்கி வருகின்றனர். அப்படிப்பட்ட நடிகை ஒருவர் குறித்து இங்கு பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிசுகிசுக்களுக்கு பெயர் போனவர்..


நாம் பார்க்கப்போகும் இந்த நடிகை, தமிழ் திரையுலகிற்கு வந்த மலையாள பைங்கிளி ஆவார். தனது திரை வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்தவர். பிற மொழி படங்களில் நடித்திருந்தாலும், அவருக்கு தமிழில்தான் அதிகளவில் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இந்த நடிகை, சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய கிசுகிசுவில் சிக்கியதால் பல்வேறு சர்ச்சைகள் இவரை சுற்றி வந்தது. இதனால், இவரது திரை வாழ்க்கையே அவ்வளவுதான் எனும் நிலையெல்லாம் உருவானது. ஆனால், அந்த நிலையை எல்லாம் உடைத்தெரிந்து, தற்போது கோலிவுட் மட்டுமன்றி தென்னிந்திய அளவில் டாப் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.


முதல் இந்தி படம்..


சுமார் 20 வருடங்களாக திரையுலகில் இருந்தாலும், பல்வேறு படங்களில் நடித்து ஹிட் கொடுத்திருந்தாலும், இதுவரை எந்த இந்தி படங்களிலும் நடிக்காமல் இருந்த நடிகை இவர். முதன்முறையாக கடந்த ஆண்டுதான் பாலிவுட்டின் பாட்ஷா நடிகருடன் ஜோடி சேர்ந்து ஒரு படத்தில் நடித்தார். இந்த படமும் உலகளவில் ரூ.1000 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. 


யார் அவர்? 


அந்த நடிகை வேறு யாருமில்லை, நம்ம ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாராதான். காதல் பிரச்சனைகளில் சிக்கி தொடர் சர்ச்சைகளுக்கு ஆளாக்கப்பட்ட இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் மீண்டு வந்து கம்-பேக் கொடுத்தார். முதன்முறையாக இவர் நடித்த இந்தி படம், ஷாருக்கான் நடித்த ஜவான்தான். அட்லீ இயக்கிய இந்த படத்திற்கு பிறகு இவர் இந்திய அளவில் பிரபலமானார். 



50 விநாடிகளுக்கு 50 கோடியா?


நடிகை நயன்தாரா, தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக விளங்குகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இவரது சம்பளமும் பல கோடிகளை எட்டும் என்பதையும் எல்லோரும் அறிவர். ஆனால், இவர் குறித்து சமீபத்தில் வெளியாகியிருக்கும் தகவல் பலரை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. இவர், திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாது விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் 50 விநாடிகள் கொண்ட விளம்பர படம் ஒன்றில் நடித்தற்காக இவர் ரூ.5 கோடியை சம்பளமாக பெற்றிருக்கிறாராம். இதை கேட்ட ரசிகர்கள், ஆச்சரியத்தில் உறைந்து போய் இருக்கின்றனர்.



மேலும் படிக்க | தனுஷின் அடுத்த படத்தில் டாப் ஹீரோயின்! த்ரிஷா இல்லை..நயன்தாரா இல்லை..வேறு யார்?


தங்கமாக தாங்கும் கணவர்..


நடிகை நயன்தாரா, தனது இளமை பருவத்தில், தனக்கு செட் ஆகாத ஆண்களின் கைகளில் சிக்கினாலும், கடைசியில் தன்னை சரியாக நடத்தும் காதலரைத்தான் கரம் பிடித்தார். 2015ஆம் ஆண்டு ‘நானும் ரவுடிதான்’ படத்தில் நாயகியாக நடித்த அவர், அதன் இயக்குநரான விக்னேஷ் சிவன் மீது காதலில் விழுந்தார். இதையடுத்து இருவரும் 2022ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு “உயிர்-உலக்” என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர். நயன்தாரா எங்கு சென்றாலும், அவரை தாங்கு தாங்கென்று தங்கத்தட்டில் தாங்குவதையே வழக்கமாக கொண்டிருக்கிறார் விக்னேஷ் சிவன். இதை பார்க்கும் ரசிகர்கள் உண்மையாகவே நயன்தாராவை பற்றி நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருப்பதாக கூறி வருகின்றனர். 


நயன்தாரா, கடைசியாக அண்ணபூரணி படத்தில் நடித்திருந்தார். அடுத்து, இவர் கன்னட மொழியில் உருவாகும் “டாக்ஸிக்” படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து தமிழில் 2 படங்களிலும், மலையாளத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். 


மேலும் படிக்க | நயன்தாரா-த்ரிஷாவை விட அதிக சம்பளம் வாங்கும் புது நடிகை! யார் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ