Latest News Why Priyanka Arul Mohan Scold A Fan : கடந்த இரண்டு நாட்களாக, செல்ஃபி கேட்ட ஒரு ரசிகரிடம் பிரியங்கா மோகன் கோபப்பட்ட வீடியாேதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் உண்மை என்னவென்று தெரியாமல் பிரியங்கா மோகனை மிகவும் பர்சனல் ஆக அட்டாக் செய்து வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரியங்கா மோகன்:


தமிழ் திரையுலகில், சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகமான நடிகை பிரியங்கா மோகன். டாக்டர் படத்தில்தான் ரசிகர்கள் முதன்முறையாக இவரை பார்த்தனர். ஆனால் இவர் அதற்கு முன்னரே கன்னட படம் ஒன்றின் மூலம் அனைவருக்கும் அறிமுகமாகி விட்டார். டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்து நடித்த இவர், அவருடன் ‘டான்’ படத்திலும் ஜோடியாக நடித்தார். 


பிரியங்கா மோகனுக்கு மேலும் ஒரு அதிகாரத்தை தேடிக்கொடுத்த படம், எதர்க்கும் துணிந்தவன். இதையடுத்து, தனுஷுடன் கேப்டன் மில்லர் படத்திலும் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்தார். இந்த படம் பெரிதாக வெற்றிப்பெறவில்லை என்றாலும் பிரியங்கா மோகன் கையில் துப்பாக்கியுடன் நிற்கும் போட்டோ வைரலானது. 


ரசிகரை திட்டிய பிரியங்கா..ட்ரோல் செய்த நெட்டிசன்கள்..


பிரதர் படத்தின் இசை வெளியீட்டு விழா, சில நாட்களுக்கு முன்பு நடைப்பெற்றது. இதில், ஜெயம் ரவி, சரண்யா பொன்வண்ணன், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அவர், இருக்கையில் அமர்ந்து கொண்டிருக்கும் போது, ஒரு ரசிகர் ஓடி வந்து செல்ஃபி எடுக்க, அதற்கு பிரியங்கா அவரை திட்டுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இதை, ஆடியோ இல்லாமல் பார்த்த ரசிகர்கள், விஷயம் என்னவென்றே தெரியாமல் பிரியங்கா மோகனை திட்டித்தீர்க்க ஆரம்பித்து விட்டனர். 



“ஒரு சில நடிகைகளுக்கு நடிக்க வராது, ஆனால் நடனமாடுவர். ஒரு சில நடிகைகள் அழகாக இருக்க மாட்டார்கள், ஆனால் நன்றாக நடிப்பர். ஆனால் பிரியங்கா மோகனுக்கு இதில் எதுவுமே வராது” என்று கூறி, அவரை மிகவும் இழிவாக ட்ரோல் செய்தனர். 


மேலும் படிக்க | காவல் அதிகாரியாக பிரியங்கா மோகன்.. சூர்யாவின் சனிக்கிழமை படத்தின் அப்டேட்


உண்மை என்ன? 


உண்மையில் என்ன நடந்தது என்றால், பிரியங்கா மோகனிடம் செல்ஃபி கேட்ட அந்த ரசிகர் அவரின் வீடு வரை தொடர்ந்து ஃபாலோ செய்திருக்கிறார். இதை வைத்துதான் பிரியங்கா மோகன் அந்த ரசிகரை திட்டியிருக்கிறார். “வீடு வரையெல்லாம் ஃபாலோ செய்து வரக்கூடாது. அது என் தோழியின் வீடு” என்று கூறிவிட்டு ரசிகரின் செல்ஃபிக்கு போஸ் கொடுக்கிறார். பின்பு, அருகில் இருக்கும் சரண்யாவிடம் “ஃபீனிக்ஸ் மால் போய்ட்டு வரும் போது, என்னை பார்த்து விட்டு வீடு வரைக்கும் இந்த பையன் ஃபாலோ பண்ணிட்டு வந்தான் மேம்..” என்று கூறுகிறார். 



ஏன் இவ்வளவு வன்மம்? 


பிரியங்கா மோகன் ஏன் அப்படி திட்டினார் என்று தெரியாமல் சிலரும், அவர் ஏன் அப்படி திட்டினார் என்பது தெரிந்து சிலரும் அவரை வேண்டுமென்றே இணையத்தில் அட்டாக் செய்து வருகின்றனர். இதில் சிலர், “ஆண் நடிகர்கள் எவ்வளவு அழகாக ரசிகர்களை கட்டிப்பிடித்து செல்ஃபி எடுக்கின்றனர். ஒரு திறமையும் இல்லாத இவளுக்கு எதற்கு இவ்வளவு சீன்..” என்று நாக்கில் நரம்பில்லாமல் பேசி வருகின்றனர். இப்போது பிரியங்காவின் பெயரை இப்படி சீரழிக்கும் இதே வாய்கள்தான், அவர் திரையுலகிற்கு வந்த புதிதில் “யார்ரா இந்த பொண்ணு சூப்பரா இருக்கு” என வாயை பிளந்து கொண்டு பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | பிரியங்கா மோகனை வருத்தெடுக்கும் நெட்டிசன்கள்!! காரணம் என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ