தமிழ் சினிமாவில் பலராலும், குறிப்பாக இளைஞர்களால் அதிகம் விரும்பி எதிர்பார்க்கப்படும் இயக்குனராக லோகேஷ் கனகராஜ் இருந்து வருகிறார்.  இதற்கு காரணம் அவர் அடுக்கடுக்காக தமிழ் சினிமாவில் கொடுத்த பிளாக்பஸ்டர் படங்கள் தான்.  கடந்த 2017ம் ஆண்டு வெளியான மாநகரம் படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.  இப்படத்தை தொடர்ந்து கார்த்தியை வைத்து 'கைதி', விஜய்யை வைத்து 'மாஸ்டர்' மற்றும் கமல்ஹாசனை வைத்து 'விக்ரம்' என அடுக்கடுக்காக மெகா ஹிட் படங்களை கொடுத்தார்.  இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் எல்லாம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரியளவில் வெற்றியினை பெற்றது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | பாக்கியலட்சுமி சீரியலிலிருந்து கோபி விலகல்: ரசிகர்கள் அதிர்ச்சி


தற்போது இயக்குனர் மீண்டும் விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கி வருகிறார்.  இந்த அதிரடி ஆக்ஷன் திரைப்படத்தில் திரிஷா, ப்ரியா ஆனந்த், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், மிஷ்கின், ஜோஜூ ஜார்ஜ், மேத்யூ தாமஸ் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.  காஷ்மீர், சென்னை போன்ற இடங்களில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்றது, விறுவிறுப்பாக நடந்துவரும் படத்தின் பணிகள் விரைவில் முடிவடைந்து படம் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது.  இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 19 வருடங்களுக்கு தான் விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட சம்பவம் குறித்து நினைவுகூர்ந்ந்துள்ளார்.  கடந்த 2005ம் ஆண்டு விஜய் மற்றும் ஜெனிலியா நடிப்பில் வெளியான 'சச்சின்' படத்தில் நடிக்கும் வாய்ப்பை தான் இயக்குனர் தவறவிட்டு இருக்கிறார்.



பட வாய்ப்பை தவறவிட்டது குறித்து லோகேஷ் கனகராஜ் கூறுகையில். 'சச்சின்' படத்தின் ஷூட்டிங் கோயம்புத்தூர் விமான நிலையத்தில் நடக்கிறது எனும் செய்தியை கேட்டதும் அவரும், அவரது நண்பர்களும் பார்வையாளர்களுக்கான டிக்கெட்டுகளை வாங்கிக்கொண்டு தந்து நண்பர்களுடன் கோயம்புத்தூர் விமான நிலையத்திற்குள் சென்றிருக்கிறார்.  அங்கு சச்சின் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிக்கான படப்பிடிப்பு நடைபெற்று இருந்திருக்கிறது, க்ளைமாக்ஸ் காட்சியில் விஜய் நடிப்பைப் பார்த்து லோகேஷ் மிகவும் பிரமித்துபோய் இருக்கிறார்.  மேலும் விஜய் மற்றும் ஜெனிலியா இடம்பெறும் காட்சிகளில் தனது நண்பர்கள் சிலர் இடம்பெற்றதாகவும் ஆனால் தன்னால் அந்த காட்சிகளில் இடம்பெற முடியாமல் போய்விட்டது என்று கூறியுள்ளார்.  இருப்பினும் தனது ரத்தம் மற்றும் சதை என அனைத்திலும் ஊறிப்போன தனது ஹீரோவை பார்த்ததே போதும் என்று திருப்தி அடைந்ததாகவும் கூறியுள்ளார்.  ஒருகாலத்தில் விஜய் நடிப்பதை ஓரமாக நின்று பார்த்தவர் இன்று, அவரையே வைத்து படத்தை இயக்கும் அளவிற்கு உயர்ந்து இருக்கிறார்.


மேலும் படிக்க | தன்னை விமர்சித்த தயாரிப்பாளருக்கு தக்க பதிலடி கொடுத்த நடிகை சமந்தா !


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ