சியான் விக்ரம் சமீபத்தில் திரையுலகில் தனது 61 வது படப்பிடிப்பை தொடங்கினார். பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திட்டத்திற்கு சியான் 61 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது . மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரம் பா.ரஞ்சித் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்கிறார். அதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வந்தன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் நேற்று முதல் கடப்பாவில் முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது. இந்த திரைப்படம் கோலார் தங்க வயலின் வரலாற்றை மையப்படுத்தி  உருவாக்கப்படுகிறது. நேற்று தொடங்கிய முதல் கட்டப்  படப்பிடிப்பு 10 நாட்கள் நடைபெறும் என படக்குழு தரப்பில் கூறுகின்றனர்.


மேலும் படிக்க | பிக்பாஸ் வைத்த டாஸ்க்கால் வந்த வினை: பழிக்கு பழி; மைனா நந்தினி வியப்பு



இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இதன் மூலம் முதன் முறையாக பா.ரஞ்சித் மற்றும் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் கூட்டணி அமைத்துள்ளனர், மேலும் இந்த படத்தில் ரஞ்சித் - விக்ரம் இணைந்த இந்தப் படத்தில் நடிகை பார்வதி மற்றும் நடிகர் பசுபதி இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


ஏற்கனவே விக்ரம் மற்றும் பசுபதி இணைந்து ’அருள்’ ’மஜா’, ‘தூள்’, ‘10 எண்றதுக்குள்ள’ ஆகிய படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது மீண்டும் இணைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | விஜய்யின் வாரிசு படத்தினால் ஏமாற்றமடைந்த தயாரிப்பாளர் தில் ராஜு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ