மலையாள திரையுலகை சேர்ந்த தமிழ் நடிகைகளுள் ஒருவர் நித்யா மேனன். இவர், தனுஷ் உடன் இனைந்து திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்திருந்தார். தற்போது மீண்டும் ஒரு படத்தில் அவருடன் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நித்யா மேனன்:


கோலிவுட் சினிமாவில் தமிழ்நாட்டை சேர்ந்த நாயகிகளை விட, கேரளாவை சேர்ந்த மலையாள நாயகிகள்தான் அதிகம். அவர்களில் பலர், தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்துள்ளனர். அப்படி பலருக்கு பிடித்த நாயகிகளுள் ஒருவராக வலம் வருபவர், நித்யா மேனன். இவரது ஆரம்ப கால சினிமா வாழ்க்கையில் இருந்தே இவருக்கு ரசிகர்கள் அதிகம். இவர் நடிப்பில் வெளியான ஓகே கண்மணி, மெர்சல், சைக்கோ உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளன. கடைசியாக தனுஷ் உடன் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்திருந்தார். இதில் இவரது ஷோபனா கதாப்பாத்திரம் பயங்கர ட்ரெண்ட் ஆனது. பலர், “ஷோபனா மாதிரி ஒரு பொண்ணு வேணும் மச்சான்..” என்று திருச்சிற்றம்பலம் படத்தின் வீடியோக்களை எடிட் செய்து ஸ்டேட்டஸ் வைப்பதுண்டு. 


மேலும் படிக்க | தளபதி 68 படத்தில் விஜய்யுடன் நடிக்க மறுத்த ஜோதிகா..! வேற ஹீரோயின் பாத்தாச்சு..!


தனுஷ் உடன் மீண்டும் இணையும் நித்யா..? 


தனுஷ், தனது 50வது படத்தை தானே இயக்கி நடிக்க இருக்கிறார். இந்த படத்த்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இருப்பினும், இந்த படத்திற்கு இப்போதே ஹைப் கூடிவிட்டது. இதை தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வன்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. இதில் நடிகை நித்யா மேனன் நடிக்க உள்ளதாக பேச்சு அடிபடுகிறது. 


இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள், மீண்டும் இந்த ஜோடியை திரையில் பார்க்க ஆர்வமுடன் இருப்பதாக கூறி வருகின்றனர். மேலும், தனுஷ் இயகத்தில் நித்யா மேனன் முதன்முறையாக நடிக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


தனுஷின் அடுத்தடுத்த படங்கள்…


நடிகர் தனுஷ், வரிசையாக பல படங்களில் கமிட் ஆகியுள்ளார். இவரது கேப்டன் மில்லர் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை அருண் மாத்தேஸ்வரன் இயக்கியிருக்கிறார். இதில் தனுஷ் உடன் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் இணைந்து நடித்துள்ளார். படம், இந்த வருட தீபாவளிக்கு வெளியாகிறது. 


கேப்டன் மில்லர் படத்தை அடுத்து தனுஷ் தனது 50 வது படத்தை இயக்கி நடிக்க இருக்கிறார். இதையடுத்து தெலுங்கு இயக்குநர் ஷேக்கர் கம்முல்லாவுடன் இவர் ஒரு படத்தில் இணைகிறார். இன்னொரு தெலுங்கு இய்ககுனரான வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழ்-தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான ‘வாத்தி’ படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 


மீண்டும் மாரி செல்வராஜ்ஜுடன் இணையும் தனுஷ்..


தனுஷ், மாரி செல்வராஜ் இயக்கத்தில் 2021ஆம் ஆண்டு வெளியான ‘கர்ணன்’ படத்தில் நடத்திருந்தார். இதையடுத்து, அவருடன் இன்னொரு படத்திலும் கைக்கோர்க்கிறார். இந்த தகவலை மாரி செல்வராஜ், தனுஷ் இருவருமே தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தனர். 


தனுஷ் தொடர்ந்து அருண் மாத்தீஸ்வரனின் இன்னொரு படத்திலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஹெச். வினோத் உடன் ஒரு படத்திலும் வெற்றி மாறனுடன் வடசென்னை 2 படத்திலும் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜெயிலர் இயக்குநர் நெல்சன் இயக்கத்திலும் அவர் ஒரு படத்தில் பணிபுரிய ஓகே சொல்லியிருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. மொத்தத்தில் இனி வரும் சில வருடங்களுக்கு தனுஷ் படு பிசிதான்! 


மேலும் படிக்க | குஷி படத்தில் அதிக சம்பளம் வாங்கியது யார்? விஜய் தேவரகொண்டாவா? சமந்தாவா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ