மீண்டும் இணையும் தனுஷ் - ஐஸ்வர்யா! விவாகரத்துக்கு முற்று புள்ளி!

கடந்த ஜனவரி மாதம் தாங்கள் இருவரும் பிரிவதாக அறிவித்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த தற்போது 9 மாதங்களுக்கு பிறகு தங்களது விவாகரத்து முடிவை ரத்து செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.    

Written by - RK Spark | Last Updated : Oct 5, 2022, 01:01 PM IST
  • தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஜனவரி மாதம் விவாகரத்து பெற்றனர்.
  • விவாகரத்து காரணம் குறித்து சொல்லப்படவில்லை.
  • தற்போது இருவரும் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.
மீண்டும் இணையும் தனுஷ் - ஐஸ்வர்யா! விவாகரத்துக்கு முற்று புள்ளி! title=

தொடர்ந்து திரையுலகை சார்ந்த பிரபலங்கள் திருமண முறிவை அறிவித்து வரும் நிலையில் தற்போது ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி வெளியாகியுள்ளது.  அதாவது நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தனுஷ் மீண்டும் பந்தத்தில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தும், நடிகர் தனுஷும் ஒருவரையொருவர் காதலித்து கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர், இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்று இரு மகன்கள் உள்ளனர்.  இந்நிலையில் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்த தம்பதியர் இருவரும் தாங்கள் பிரியப்போவதாக அறிவித்தனர், இந்த செய்திகள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது.  இருவரும் தனித்தனியாக பிரிந்து அவரவர் பணிகளில் கவனம் செலுத்த தொடங்கி வந்தனர்.

மேலும் படிக்க | ராஜராஜ சோழன் விவகாரம்... வெற்றிமாறன் கருத்துக்கு பேரரசு பதிலடி

தனுஷ்-ஐஸ்வர்யா இவர்களது பிரிவிற்கான காரணம் எதுவும் வெளியிடப்படவில்லை, அதேபோல இருவரும் ஒருவரையொருவர் தாக்கி பேசிக்கொள்ளாமல் அவர்களின் வேலையை செய்து வந்தனர்.  அதன்பிறகு இருவரது குடும்பத்தினரும் இவர்களை மீண்டும் சேர்த்துவைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியானது.  சமீபத்தில் தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியரின் மூத்த மகன் பள்ளியில் ஸ்போர்ட்ஸ் கேப்டனாக பதவியேற்ற போது தனுஷும் ஐஸ்வர்யாவும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தனர்.  இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் ரசிகர்கள் பலரும் இருவரும் மீண்டும் இணையப்போகிறார்களோ என்று சந்தேகித்து வந்தனர்.

இந்நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த விவாகரத்து முடிவை ரத்து செய்து மீண்டும் பந்தத்தில் இணையப்போவதாக செய்திகள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.  இதனை பார்த்த ரசிகர்கள் பலர் ஆர்வமாக கமெண்ட் செய்து வருகின்றனர், அதில் ஒருவர் தனுஷும் ஐஸ்வர்யாவும் இணையப்போகும் செய்தி உண்மையாக இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன், இதுபோல சமந்தா-நாக சைதன்யாவும் இணைய வேண்டுமென விரும்புகிறேன் என்று கமெண்ட் செய்துள்ளனர், மற்றொருவர் கமெண்டில் தனுஷும், ஐஸ்வர்யாவும் மீண்டும் இணைகிறார்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் படிக்க | வேற வழியே இல்ல Southல் சேர்ந்துட வேண்டியதுதான் - சல்மான் கான் எடுத்த முடிவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News