பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாபத்திரத்தின் மூலம் தனது அழகாலும், துறுதுறு நடிப்பாலும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை சித்ரா. இவர் கடந்த 9ஆம் தேதி தனியார் விடுதி ஒன்றில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சித்ரா (Actress chitraதற்கொலை குறித்து கடந்த 5 நாட்களாக விசாரணை செய்து வந்த காவல் துறையினர், சித்ராவின் கணவர் ஹேமந்தை தீவிர விசாரணை செய்த பின்னர் கைது செய்தனர். ஹேமந்த் (Hemanth Kumarகொடுத்த அழுத்தம் காரணமாகவே சித்ராவுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்தது.


ALSO READ | சித்ரா மரணம்! போலீஸில் ஹேம்நாத் கூறிய திடுக் தகவல்!


இந்நிலையில் தற்போது நடிகை சித்ராவை போலவே ஒருவர் போட்டோஷூட் நடத்தியுள்ளது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. நடிகை சித்ரா நடித்த முல்லை (Mullai) கதாபாத்திரத்தில் அடுத்து யார் நடிப்பார்கள் என ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து இவர் தான் முல்லை கேரக்டரில் நடிப்பார் என சில நடிகைகள் குறித்தும் கிசுகிசுக்கப்பட்டது. 


 



 


இதற்கிடையில்  தொலைக்காட்சி பிரபலமான கீர்த்தனா தினகர் என்பவர் சித்ராவின் முல்லை கெட்டப்பில் புதிதாக போட்டோஷூட் நடத்தியுள்ளார். கீர்த்தனா வெளியிட்ட இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. நிகழ்ச்சி தொகுப்பாளரான இவர், ஜீ தமிழின் டான்ஸ் ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


ALSO READ | Instagram இல் வைரலாகும் நடிகர் சித்ராவின் கடைசி வீடியோ!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR