ஜெய்பீம் படத்தை தொடர்ந்து சூர்யா, பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் என்கிற படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு புதுக்கோட்டை பகுதிகளில் நடைபெற்று சமீபத்தில்  நிறைவடைந்தது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி போன்ற பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். பசங்க 2 படத்திற்கு பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா இரண்டாவது முறையாக நடிக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | பொண்ணுங்கன்னா பலவீனம் இல்லை..பலம்! வெளியானது எதற்கும் துணிந்தவன் ட்ரைலர்!


வெறும் கமர்சியல் படங்களில் மட்டும் நடிக்காமல் சமூக அக்கறை கொண்ட படங்களை தேடி நடித்து வருகிறார் சூர்யா. முன்னதாக பழங்குடியின மக்கள் படும் பிரச்சனைகளை காட்டும் விதமாக ஜெய்பீம் படத்தில் நடித்திருந்தார். இப்படம் ஆஸ்கர் விருது வரை சென்றது, இருப்பினும் கடைசி நேரத்தில் விருது பட்டியலில் இருந்து வெளியேறியது. ஜெய் பீம் படம் சூர்யாவிற்கு மிகப்பெரிய பெயரை பெற்று தந்துள்ளது. 



அந்த வகையில் சூர்யா தற்போது நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படமும் தமிழகத்தில் நடந்த முக்கிய பிரச்சினையை மையமாக வைத்து உருவாகியுள்ளதாக கூறப்பட்டது. அதனை உறுதி செய்யும் விதமாக டிரெய்லரில் சில காட்சிகள் இடம்பெற்றுள்ளது. பொள்ளாச்சியில் பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தமிழக மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். அந்த சம்பவத்தை மையமாக வைத்து தான் எதற்கும் துணிந்தவன் படம் உருவாகி உள்ளது. பெண்களை ஏமாற்றி அவர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி, அதனை வீடியோ எடுத்து மிரட்டும் கும்பலிடமிருந்து அவர்களை எப்படி சூர்யா காப்பாற்றுகிறார் என்பதுதான் எதற்கும் துணிந்தவன் படத்தின் கதையாக இருப்பது போன்று ட்ரெய்லர் பார்த்தபின் தெரியவருகிறது. 



நிஜ வாழ்க்கையிலும் மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு முதல் ஆளாக குரல் கொடுத்து வருகிறார் சூர்யா. நீட் பிரச்சினையில் தன்னுடைய நிலைப்பாட்டை ஆணித்தரமாக கூறியிருந்தார், இதற்கு அவர் மீது எதிர்ப்புகள் வந்த போதிலும் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றாமல் உறுதியாக இருந்தார்.  இதேபோல் படத்திலும் தன்னால் முடிந்த சமூகத்திற்கு தேவையான கதையம்சம் உள்ள படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். எதற்கும் துணிந்தவன் திரைப்படம் மார்ச் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அந்த படத்தை தொடர்ந்து சூர்யா ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பாலா படத்தில் இணைகிறாரா அல்லது வேறு இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளாரா என்ற தகவல் தற்போது வரை வெளியாகவில்லை.


மேலும் படிக்க | பிக்பாஸ் கமல் விலகல் : உண்மை காரணம் என்ன?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR