கோமாளி படத்தை இயக்கியிருந்த பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக அவரே நடித்து இயக்கியிருந்த லவ் டுடே படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது, வெறும் ஆறு கோடியில் தயாரிக்கப்பட்ட இந்த படம் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இதனால் பிரதீப் ரங்கநாதன் அடுத்து எந்த படத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.  இதற்கிடையில் பிரதீப் விஜய்யிடம் கதை சொல்லி இருப்பதாகவும். அதற்கு விஜய் தரப்பிலிருந்து சம்மதம் வந்ததாகவும் கூறப்பட்டது.  மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது, இதனை உறுதிப்படுத்தும் விதமாக பிரதீப் மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஹீரோயின் இல்லாத படத்தில் நடிக்கும் கார்த்தி! இயக்குநர் யார் தெரியுமா?


இருவரும் இணையும் இந்த படத்தை முதலில் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்க இருந்தது, இதற்கான வேலைகளும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த படத்தில் இருந்து ராஜ் கமல் நிறுவனம் வெளியேறியதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது, காரணம் படத்தின் பட்ஜெட் அதிகரித்துள்ளது தான் என்று கூறப்படுகிறது. விக்னேஷ் சிவன் பத்து கோடி சம்பளமும், பிரதீப் ரங்கநாதன் 20 கோடி சம்பளமும் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த படத்தை தற்போது லியோ படத்தை தயாரித்த 7 ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.



மேலும் இந்த படத்தில் யார் யார் நடிக்க உள்ளனர் என்பது குறித்த எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.  அனிருத் இசையமைப்பாளர் என்பது தவிர வேறு எதுவும் இந்த குறித்து வெளியாகவில்லை. தற்போது இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா இணையவுள்ளதாக கூறப்படுகிறது.  சமீபத்தில் எஸ்ஜே சூர்யா மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா போன்ற படங்களில் நடித்து அசத்தி இருந்தார்.  விக்னேஷ் சிவன் படத்தில் எஸ்ஜே சூர்யா நடிப்பது இதுவே முதல் முறை.  


விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து படம் இயக்க இருந்தார். லைக்கா நிறுவனம் தயாரிக்க இருந்த இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது/ இருப்பினும் கடைசி நிமிடத்தில் அஜித்திற்கு கதை பிடிக்காததால் விக்னேஷ் சிவன் இந்த படத்தில் இருந்து வெளியேறினார். தற்போது இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார், துபாயில் இதற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடைசியாக வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் இந்த படத்தில் நடித்து இருந்தனர். விக்னேஷ் சிவன், பிரதீப் இணையும் இந்த படம் விக்னேஷ் சிவனின் சினிமா கரியரில் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.


மேலும் படிக்க | ஆர்.ஜே.பாலாஜியின் படத்தில் நடிக்கும் லோகேஷ் கனகராஜ்! என்ன கேரக்டர் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ