சமீபத்தில் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டு திரையரங்கில் வெளியான காதல் திரைப்படமான 'ராதே ஷ்யாம்' படத்தில் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்திருந்தார்.   நடிகை பூஜாவிற்கும் உடன் நடித்த பிரபாஸுக்கும் இடையே பிரச்சனை என்றும், அதேபோல சமந்தாவிற்கு இவருக்கும் ஏதோ பிரச்சனை என்றும் இவரை பற்றி வெளியான சில வதந்திகள் குறித்து பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.  அதில் பூஜா கூறுகையில் இணையங்களில் பல தவறான வதந்திகள் பரவிக்கொண்டு இருக்கின்றது, இருப்பினும் அவை மோசமான நிலையை ஏற்படுத்தவில்லை என்று கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | ‘பீஸ்ட்’ போஸ்டர்ல இந்த விஷயங்களைக் கவனிச்சீங்களா!?


மேலும் அவர் கூறுகையில், எதிர்மறையான விஷயங்கள் சில நேரங்களில் துரதிர்ஷ்டவசத்தை அளிக்கும்  என்று நான் நினைக்கிறேன்.   ஒரு விஷயம் உண்மையாகவே இருக்காது, ஆனால் மக்கள் அதை பற்றி பேச விரும்புகிறார்கள்.  அதனால் நான் என்னை நேர்மறையான எண்ணங்களால் நிரப்பி கொள்கின்றேன், அதேபோலவே எனது சமூக ஊடக பக்கங்களில் எப்போதும் நல்லதைப் பற்றியே பகிர்ந்து கொள்கிறேன்.  என் வாழ்க்கையில் பல முறை எதிர்மறையான நிகழ்வுகள் பல நிகழ்ந்துள்ளன, அதனால் மேலும் மேலும் நான் என் வாழ்க்கையில் எதிர்மறையான விஷயங்களை சேர்க்க விரும்பபவில்லை, நேர்மறையான செயல்களிலேயே நான் கவனம் செலுத்த முயற்சிக்கிறேன் என்று கூறியுள்ளார்.


மேலும் பூஜா கூறுகையில், சில நேரத்தில் நீங்கள் ஒரு படத்தைப் பார்த்து, அது ஓரளவு பரவாயில்லை என்று நினைப்பீர்கள், ஆனால் அந்த படம் பாக்ஸ் ஆபிசில் ஹிட் ஆகும்.  அதேபோல சில சமயங்களில் நீங்கள் அருமையாக உள்ளது என்று நினைக்கும் படம் பாக்ஸ் ஆபிசில் சுமாராக இருக்கும்.  என்னை பொறுத்தவரை எல்லாம் படமும் சிறந்த படம் தான் என்று கூறியுள்ளார்.  பூஜாவுக்கும் பிரபாஸுக்கும் இடையே பிரச்சனை இருப்பதாக செய்திகள் வெளிவரத் தொடங்கிய சமயத்தில், ​​UV கிரியேஷன்ஸ் அந்த செய்தியினை மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது.  



அதில், 'இந்த செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை, பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த மரியாதையும், அன்பும் கொண்டிருக்கிறார்கள்.  நிஜமாகவே அவர்கள் இருவரும் திரைக்கு வெளியேயும் ஒரு நல்லவிதமான நட்பில் இருந்து வருகின்றனர், அதனால் தான் திரையிலும் அவர்களது கெமிஸ்ட்ரி பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது.  பூஜா எப்போதுமே படப்பிடிப்பு தளத்திற்கு உரிய நேரத்தில் வந்துவிடுவார், மேலும் அவருடன் பணியாற்றுவது மிகவும் எளிதானது.  அப்படி இருக்கையில் இதுபோன்ற வதந்திகள் பரப்பப்படுவது யாரோ ஒருவரின் கற்பனையில் உருவான ஒன்று' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | வைரலாகும் ராஜமௌலியின் ஜாதி குறித்த பேஸ்புக் பதிவு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR