தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் வெங்கட் பிரபு ஒருவர். சென்னை 28 என்ற படத்தின் மூலம் ஜாலியான இயக்குநர் என பெயரெடுத்தவர் சரோஜா உள்ளிட்ட ஹிட் படங்களை இயக்கினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெங்கட் பிரபுவின் திரைக்கதை எப்போதும் மாறுபட்டதாக இருக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது. அவர் இயக்கிய மங்காத்தா படம் வெற்றி பெற்றதற்கு வெங்கட் பிரபுவுடைய கதை சொல்லும் பாணிக்கு முக்கிய இடம் இருப்பதாகவும் கருதப்படுகிறது.


மேலும் படிக்க | ராஜமெளலி படத்தில் நடிப்பவர்களைத் துரத்தும் வித்யாசமான சோகம்!


சமீபத்தில் சிம்புவை வைத்து அவர் இயக்கிய மாநாடு படத்தில் டைம் லூப் கான்செப்ட்டை ரசிகர்களுக்கு புரியும்படி திரைக்கதையில் வைத்திருந்தது வரவேற்பைப் பெற்றது. படமும் மாபெரும் வெற்றியடைந்து சிம்புவுக்கு கம்பேக் படமாக அமைந்தது.



இந்நிலையில் சிவகார்த்திகேயனை வைத்து வெங்கட் பிரபு படம் இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தை ஏஜிஎஸ் எண்டெர்டெய்ன்மெண்ட் தயாரிக்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.


வெங்கட் பிரபு தற்போது நாக சைதன்யாவை வைத்து தெலுங்கில் படம் இயக்கிக்கொண்டிருக்கிறார். அந்தப் படத்தின் பணிகள் முடிவடைந்ததும் சிவகார்த்திகேயனுடன் இணையும் படத்திற்கான வேலைகள் தொடங்கும் என பேசப்படுகிறது.


மேலும் படிக்க | பீஸ்ட் படமும் கூர்கா படமும் ஒன்றா? கொந்தளித்த இயக்குனர்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR