Cinema New In Tamil: வளர்ப்பு மகனால் பிரச்சனையா? ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்திற்கு காரணம் மாமியாரா? சோசியல் மீடியாவில் நடக்கும் விவதாம். நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய காதல் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்து பிரிந்தது ஏன் என்பது பற்றி பார்க்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

படத்தொகுப்பாளர் மோகனின் இளைய மகன்தான் ஜெயம் ரவி. இவர் சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்ததும். சினிமாவில் பணியாற்ற விரும்பியுள்ளார். அவர் விருப்பத்திற்கேற்ப அவரை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் உதவி இயக்குனராக சேர்த்துவிட்டுள்ளார் அவரது தந்தை. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமலஹாசன் நாயகனாக நடித்த ஆளுவந்தான் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார் ஜெயம் ரவி. 


இவர் நல்ல ஒரு இயக்குனராக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென ஹீரோவாக அறிமுகமாகி இன்ப அதிர்ச்சி கொடுத்தார் ரவி. இவர் முதன்முதலில் ஹீரோவாக நடித்த திரைப்படம் ஜெயம் என்பதால், இவர் ஜெயம் ரவி என்று தமிழ் சினிமாவில் அழைக்கப்பட்டார். தன்னுடைய நடிப்புத் திறமையையால் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. 


இந்நிலையில் தான் கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஜெயம் ரவி. இவர்களுக்கு ஆரவ், அயான் என இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். இதில் ஜெயம் ரவியின் மூத்த மகன் ஆரவ் தன்னுடைய தந்தையுடன் டிக் டிக் டிக் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்திலும் ஜெயம் ரவியின் மகனாகவே அவர் நடித்திருப்பார்.


மறுபுறம் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி சினிமாவில் நடிக்காவிட்டாலும் சினிமா நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் விதவிதமான ஆடைகளில் போட்டோ ஷூட் நடத்தி, அதனை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.


அவர் போட்டோவை பார்த்து பலரும் கேட்கும் ஒரே கேள்வி எப்போ சினிமாவில் நடிக்கப் போகிறீர்கள்? என்பதுதான். அந்த அளவுக்கு அனைவருக்கும் பிடித்த முகமாக இருந்தார். நல்ல ஜோடி என அறியப்பட்ட இவர்களிடையே பிரச்சனை உருவானதாகத் தகவல்கள் வெளியாகின.


மேலும் படிக்க - Aarti Ravi : “எனது அனுமதியின்றி விவாகரத்து அறிவிப்பு வெளியானது” ஆர்த்தி ரவி பகீர் பதிவு!!


அது உண்மை என நிரூபிக்கும் வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஜெயம் ரவியும், ஆர்த்தியும் விவாகரத்து செய்து பிரிய உள்ளதாக செய்திகள் வெளியாகி இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இருந்தாலும் அதுக்குறித்து இருவருமே எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்ததால், அந்த விவகாரம் கப்சிப் ஆனது. 


இந்தநிலையில், தற்பொழுது ஆர்த்தி விவாகரத்து செய்து பிரிந்து விட்டதாக நடிகர் ஜெயம் ரவியே அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இருப்பினும் அவர்களுடைய விவாகரத்துக்கான காரணத்தை ஜெயம் ரவி வெளியிடவில்லை. 


ஆனால், ஜெயம் ரவி-ஆர்த்தி விவகாரம் சோசியல் மீடியாவில் பேசுப்பொருளாக மாறியது. இவர்களின் விவகாரத்துக்கு காரணம், ஜெயம் ரவியின் மாமியார் தான் எனக் கூறிவருகின்றனர். அதுவும் ஆர்த்தியின் அம்மா சுஜாதாவுக்கு சங்கர் என்ற வளர்ப்பு மகன் இருக்கிறாராம். சுஜாதா நடத்தி வரும் தயாரிப்பு நிறுவனத்தை அந்த வளர்ப்பு மகன்தான் நிர்வகித்து வருகிறாராம்.


ஆர்த்தியின் அம்மாவின் தயாரிப்பு நிறுவனத்தால் எடுக்கப்பட்ட படத்தில் தான் ஜெயம் ரவி நடத்திருந்தார். அந்த படமும் சரியாக போகவில்லை. இதன் காரணமாக மாமியாருக்கும் ஜெயம் ரவிக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டு உள்ளது. இறுதியாக அது முற்றி, ஜெயம் ரவி-ஆர்த்தி இடயே மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக கூறுகின்றனர்.


ஆனால் இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் சோசியல் மீடியாவில் இவர்களுடைய விவாகரத்திற்கு முக்கிய காரணம் ஈகோ தான் என்று பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.


மேலும் படிக்க - ஜெயம் ரவிக்கு விவாகரத்து! காரணம் என்ன? அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ