மக்களே ஜாக்கிரதை! இந்த 7 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்!

Thu, 17 Oct 2024-8:07 am,

சென்னையில் புதிதாக உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அதிக கனமழை இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் ரெட் அலர்ட் விடப்பட்டு இருந்தது.

 

இந்நிலையில் புயல் ஆந்திரா நோக்கி நகர்ந்ததால் சென்னைக்கு பாதிப்பு ஏற்படவில்லை. இருப்பினும் சில மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 

திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 

ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 

எனவே இந்த மாவட்டங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அரசும் உதவிக்காக தயார் நிலையில் உள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link