புல் ஃபைட் வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் நடக்கும் சில சுவாரசியமான நிகழ்ச்சிகளின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. இவற்றில் பல நமக்கு பெரும் ஆச்சரியத்தை அளிக்கின்றன. அப்படி ஆச்சரியத்தை அளிக்கும் ஒரு வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. 


காளை சண்டை அதாவது புல் ஃபைட் ஸ்பெயினுக்கு மிகவும் பிரபலமான விளையாட்டாகும். இதில் நகருக்குள் உள்ள ஆபத்தான காளைகளின் முன் மக்கள் ஓடிவந்து அவற்றிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் காட்சிகளை நாம் காணலாம். 


மேலும் படிக்க | நாங்களும் வாசிப்போம்ல, டிரம்ஸ் வாசிக்கும் யானை: வீடியோ வைரல் 


பொதுவாக, கோபத்தில் இருக்கும் காளைகள், மனிதர்களை ஒரேயடியாக தூக்கி எறியும் தைரியம் கொண்டவை. இந்நிலையில், சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள இந்த வீடியோ அனைவரையும் மூச்சு திணற வைத்துள்ளது. அந்த வீடியோவில், ஒருவர் காளைகளின் தாக்குதலிலிருந்து தொடர்ந்து 5 முறை தப்பிச் செல்வதை காண முடிகின்றது. இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் திகைத்துப் போயுள்ளனர். அவர்களுக்கு இதை நம்புவது மிகவும் கடினமாக உள்ளது.


மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ



இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்த ​​நரேந்திர சிங் என்ற பயனர், 'எனக்கும் இப்படி ஒரு அதிர்ஷ்டம் இருந்தால் போதும்’ என தலைப்பில் எழுதியுள்ளார். வீடியோவில் துவக்கத்தில், ஒருவர் சாலையில் வேகமாக ஓடுவதை காண முடிகின்றது. மெய்சிலிக்க வைக்கும் இந்த வீடியோவை பார்த்து பயனர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


காளையின் தாக்குதலிலிருந்து லாவகமாக தப்பித்த நபர்


அந்த நபர் மிக லாவகமாக தன்னை காப்பாற்றிக்கொள்வதை இந்த விடியோவில் காண முடிகின்றது. காளைகள் அவரை ஒன்றன் பின் ஒன்றாக விரட்டும் நிலையில், ​சாலையோரம் கட்டப்பட்டிருந்த வேலியை அவர் கடக்கிறார். அவர் பல காளைகளின் தாக்குதல்களை தாக்குப்பிடித்து ஓடுகையில், ஒருமுறை ஒரு காளை தாக்கி அவர் கீழே விழுவதையும் வீடியோவில் காண முடிகின்றது. ஆனால், அதற்கு பிறகும், அவர் தன்னை சுதாரித்துக்கொண்டு, காளைகளைக் கையாண்டு ஆச்சரியப்படும் வகையில் தப்பித்துச் செல்கிறார்.


இந்த வீடியோவுக்கு இணையத்தில் ஏகப்பட்ட லைக்குகளும் வியூஸ்களும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 


மேலும் படிக்க | மலைப்பாம்பை வம்புக்கு இழுத்த நபர், எடுத்தேன் பாரு ஓட்டம்: வீடியோ வைரல் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ