வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. பாம்புகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாம்பை பார்த்தால் அனைவரும் அந்த இடத்தை விட்டு ஓடவே ஆசைப்படுவார்கள். ஆனால், சிலர் அசால்டாய் அதனுடன் பொழுதை கழிப்பதும் உண்டு. மிகவும் ஆபத்தான பாம்புகளுடனும் நேரத்தை கூலாக கழிக்கும் சிலரும் உள்ளனர். இதை காட்டும் ஒரு வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றது. 


காட்டில் திடீரென நேருக்கு நேர் வந்த மூன்று ஆபத்தான ராஜ நாகப்பாம்புகள் தொடர்பான வீடியோ இது. இந்த மூன்று ராஜ நாகங்களும் ஒன்றன் அருகில் ஒன்று இருக்க, அங்கு ஒரு இளைஞனும் வருகிறார். ஆனால், அவர் பாம்புகளை பார்த்து அச்சப்படாமல், மிகவும் கூலாக அவற்றை கையாள்கிறார். வீடியோவில் இதற்கு பிறகு நடக்கும் விஷயம் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. 


கடுப்பான நாகப்பாம்பு 


சில நொடிகள் கொண்ட இந்த வீடியோவில், மூன்று ஆபத்தான நாகப்பாம்புகள் காட்டுகள் ஒன்றுக்கொன்று மிக அருகில் இருப்பதைக் காண முடிகின்றது. மூன்றுக்கும் இடையே ஒரு சில அங்குல இடைவெளி உள்ளது. சில நொடிகளுக்குப் பிறகு அங்கு ஒரு இளைஞன் வருகிறார். அவர் பாம்புகளை பார்த்து அச்சப்படவில்லை. மாறாக, அவற்றை தன் விருப்பப்படி இயக்க முற்படுகிறார். மூன்று பாம்புகளும் அவர் சொல்வதை கேட்பது போலத் தோன்றுகிறது. எனினும், உண்மையில் அவை கடுப்பாகின்றன. கோப மிகுதியால் ஒரு பாம்பு அந்த இளைஞனை கொத்த வருகிறது. மிகவும் ஆக்ரோஷமாக அவரை தாக்க வருகிறது. 


மேலும் படிக்க | சைக்கிளில் சாகசம் செய்து சறுக்கி விழுந்த நபரின் வைரல் வீடியோ 


விபரீத விளையாட்டில் ஈடுபட்ட இளைஞன்: 



எப்படியோ உயிர் பிழைத்தார் இளைஞன் 


இளைஞனின் கவனக்குறைவு அவரை நாகப்பாம்புக்கு இரையாக்கியிருக்கும் என்று இந்த வீடியோவை பார்த்தால் தெரிந்துகொள்ள முடிகின்றது. இந்த வீடியோ சில நாட்களுக்கு முன்னரே வந்த வீடியோவாகத் தெரிகிறது. எனினும், கடந்த சில நாட்களாக இது வெகுவாக வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவை ஐஎஃப்எஸ் அதிகாரி சுஷாந்த் நந்தா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் ஹேண்டில் @susantananda3 இல் பதிவேற்றியுள்ளார்.


இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இதற்கு பல வித கமெண்டுகள் கிடைத்த வண்ணம் உள்ளன. விபரீத விளையாட்டில் தேவை இல்லாமல் ஈடுபட கூடாது என்பதற்கு இந்த வீடியோ ஒரு நல்ல உதாரணமாகும். விலங்குகளின் மனதை மனிதர்களால் புரிந்துகொள்ள முடியாது. அவர்களை சீண்டுவது, தொந்தரவு செய்வது மனிதர்களின் பொழுதுபோக்காகி விட்டது. அதை தவிர்ப்பது மிக அவசியமாகும்.


மேலும் படிக்க | கன்னாபின்னானு காதல் செய்யும் பாம்புகள்: இணையத்தை கலக்கும் 'ஸ்னேக் லவ்'


 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ