கையில் இருக்கும் மொபைல் போனை வைத்து, சிலர் வீடியோ கிரியேட்டர் ஆகி லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர். ஆனால் ஒரு சிலர், தான் வைரலாக வேண்டும் என்பதற்காகவே சில தேவையற்ற விஷயங்களை செய்து ட்ரோல் ஆவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். ஒரு சிலர், வேண்டுமென்றே வெறுப்பேற்றும் செயல்களை செய்து வைரலாகி வருகின்றனர். அதை பார்க்கும் போது, ஒரு சிலருக்கு எரிச்சலும், ஒரு சிலருக்கு குமட்டலும் வரும். அப்படிப்பட்ட வீடியோ ஒன்றுதான் தற்போது வைரலாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வைரலாகும் வாந்தி வரும் வீடியோ!


தற்போது மக்கள் மத்தியில் வைரலாகி வரும் வீடியோவில், ஒரு இளைஞர் ரோட்டில் கிடக்கும் சாணிக்கு அருகில் சென்று அமர்கிறார். கையில் ரொட்டியை வைத்துகொண்டிருக்கும் அவர், கொஞ்சம் கொஞ்சமாக அந்த ரொட்டியில் சாணியை ஜாம் போல தடவுகிறார். பின்னர் அதை அப்படியே எடுத்து வாயில் வைக்கிறார்.