Viral Video | சன் டிவி சீரியல் நடிகையின் வீடியோ வைரல்.. ரசிகர்கள் மகிழ்ச்சி

Serial Sctress Swathi Konde Video:  அரவிந்த் சுவாமியை பார்க்கும் பொழுது என் மனசுக்குள்ள இருந்த சந்தோஷத்தை சொல்றதுக்கு வார்த்தையே இல்லை -சுவாதி கோண்டே

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 1, 2024, 04:29 PM IST
Viral Video | சன் டிவி சீரியல் நடிகையின் வீடியோ வைரல்.. ரசிகர்கள் மகிழ்ச்சி title=

Latest Tamil Cinema News: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு சீரியலில் கதாநாயகியாக நடிகை சுவாதி கோண்டே நடித்துக்கொண்டு இருக்கும் நிலையில், நடிகர் கார்த்திக் மற்றும் அரவிந்த் சுவாமி இருவரும் நடித்த மெய்யழகன் திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். அப்பொழுது சூட்டிங் ஸ்பாட்டில் அரவிந்த் சுவாமி தன்னிடன் நடந்துக்கொண்டே விதத்தை பற்றி உணர்ச்சி பொங்க பேட்டி அளித்திருந்தார். அது தற்போது வைரலாகி வருகிறது.

ஒரு சில நடிகைகள் சீரியலில் அறிமுகமாகி திரைப்படங்களிலும் பெரிய அளவில் பிரபலமாவது உண்டு. அந்த வரிசையில், விஜய் டிவியில் ஒளிபரப்பான "ஈரமான ரோஜாவே" சீரியல் மூலமாக தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அதைத்தொடர்ந்து தற்போது சன் டிவியில் "மூன்று முடிச்சு" என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் கார்த்தி மற்றும் அரவிந்த் சுவாமி நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்ற "மெய்யழகன்" திரைப்படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

"மெய்யழகன்" திரைப்படத்தில் நடிக்கும் போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பற்றி சுவாதி கோண்டே பேசி இருக்கிறார். அவர் கூறும் போது, நானும் அரவிந்த் சுவாமியும் நடித்த காட்சியை திரையில் பார்க்கும் பொழுது எனக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. நான் சின்ன வயசுல இருந்து அரவிந்த் சுவாமியோட ரசிகை. ஆனா அவரை சூட்டிங் ஸ்பாட்டீல் பக்கத்துல பார்த்தப்போ, எனக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. அவர் பயங்கர கலரா இருந்தார். அவருடைய கலரை பார்த்து தான் பிரம்மித்து போயிட்டேன். இப்படி கூட யாராவது இருப்பாங்களா என்று கூட நினைச்சேன். 

அதுக்கப்புறம் அவருடன் இணைந்து நடிக்கும் காட்சிகள் வந்தது. அவரை நான் கட்டிப்பிடிப்பது போன்ற காட்சிகள் எடுக்க வேண்டி இருந்தது. ஆனால் என்னால் அவரை கட்டிப்பிடிக்க முடியவில்லை. நான் பதட்டத்தோடு இருந்தேன். அதைப்பார்த்த அரவிந்த் சுவாமி என்னிடம் இயல்பாக பழகினார் பேசினார். இப்படி செய்யுங்கள், அப்படி செய்யுங்கள் என சொல்லிக் கொடுத்தார். எனக்கு அது ரொம்பவே சந்தோஷமாக இருந்தது. அப்பொழுது சீரியலில் நடிக்கும் போது நம்முடன் நடிப்பவர்கள் நமக்கு ஒரு கம்ஃபர்ட் கொடுப்பது போல தான், அரவிந்த் சுவாமி எனக்கு கொடுத்தார். 

அவரை இதுக்கு முன்னாடி நான் பார்த்தது கூட கிடையாது. ஆனா ஏதோ பல வருடம் பந்தம் இருக்கிறது மாதிரி அவர் என்னிடம் நடந்துகிட்டார். அவரை பார்க்கும் பொழுது என் மனசுக்குள்ள இருந்த சந்தோஷத்தை சொல்றதுக்கு வார்த்தையே இல்லை என மிகவும் சந்தோஷமாக கூறினார்.

மேலும் படிக்க - அக்டோபர் மாதம் ரிலீஸாகும் 5 பெரிய ஹீரோக்களின் படங்கள்! முழு லிஸ்ட்..

மேலும் படிக்க - மெய்யழகன் படத்தில் நடிக்க அதிக சம்பளம் வாங்கியது யார்? கார்த்தியா? அரவிந்த் சாமியா?

மேலும் படிக்க - வனிதா விஜயகுமாருக்கு பிக்பாஸ் பிரபலத்துடன் திருமணம்? வைரலாகும் இன்விடேஷன்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News