கையில் மொபைல் இல்லாம யாரையாவது இன்று பார்க்க முடியுமா? அனைவரின் வாழ்வோடு பின்னிப் பிணைந்து விட்ட மொபைல், தொடர்பு கொள்வதற்காக மட்டும் பிரபலமாகவில்லை. வீடியோ, பாட்டு, படம் பார்ப்பது என பொழுதுபோக்குக்கான முக்கியமான சாதனமாகவும் மாறிவிட்டது. மொபைல் மற்றும் இணையம் இல்லாத உலகை கற்பனையே செய்து பார்க்க முடியாத தலைமுறையை நாம் பார்க்கிறோம். சில சமயங்களில் இதை வருத்தமாக சொன்னாலும், மொபைல் மற்றும் இணையத்தின் தாக்கத்தையும், அவற்றின் பயனையும் தவிர்த்துவிட முடியாது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தகவல்தொடர்பு, பொழுதுபோக்கு என்பதற்கு அடுத்தகட்டமாக சமூக ஊடகங்கள், வாழ்க்கையின் அங்கமாகிவிட்டன. சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் பல செய்திகளை உடனுக்குடன் வழங்குகின்றன.


பயனுள்ள தகவல்ககளைத் தரும் சமூக ஊடகங்கள், பொழுதுபோக்குவதற்கான ஒரு வழியாகவும்  மாறிவிட்டன. நமது வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை தளர்த்திக்கொள்ள உதவும் இவை இருமுனை கொண்ட கத்தி தான். இதிலிருந்து நன்மையும் கிடைக்கிறது தீமையும் கலந்தே வருகிறது.


ஏனென்றால், இணையத்தில் பகிரப்படும் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்று சொல்லும் அளவில் வீடியோக்கள் பகிரப்பட்டு பார்த்து ரசிக்கப்படுகின்றன. இணையத்தில் பகிரப்படும் வீடியோக்களை பார்த்து ரசிப்பதுடன், அவை தொடர்ந்து பகிரப்பட்டு வைரலாகின்றன. வைரலாகும் வீடியோக்களைப் பார்ப்பவர்கள், அவர்களும் அதன் தாக்கத்தால் உந்தப்பட்டு, தாங்கள் காணும் காட்சிகளையும் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் உலாவவிடுகின்றனர்.


மேலும் படிக்க | ‘ஏம்மா அந்த பக்கமா போம்மா’.... எருமையை கடுப்பேற்றிய பெண்ணின் டான்ஸ்: வைரல் வீடியோ


அப்படி ஒரு வீடியோ தான் இன்று நாம் பார்க்கவிருக்கும் வீடியோ, இந்த வீடியோவில் ’ஆட்டுமந்தைக் கூட்டம்’ என கேலியாக சொல்லும் விஷயத்தின் உண்மையை உணர்ந்துக் கொள்ள முடிகிறது. நூற்றுக்கணக்கான ஆடுகள் வரிசையாக நிற்க வைக்கப்பட்டாலும், அவை யாராவது ஒருவர் முதலில் செல்லட்டும் என்று நிற்பதை வீடியோவில் பார்க்க முடிகிறது. 



ஆட்டுமந்தையை அவற்றின் பட்டியில் அடைக்க, ஆடுகளை பராமரிப்பவர் செய்யும் முயற்சி சுவாரசியமானது. சொன்னால், சொன்னதை சுறுசுறுப்பாக செய்யும் தனது செல்லக்குட்டியிடம் சொன்னதும், அது ஓடிவந்து, ஆட்டுமந்தையின் மீது நடந்து, ஓடிப் போய் உள்ளே செல்லத் தொடங்கியதும், ஆட்டுமந்தை உள்ளே நகர்கிறது. 


மேலும் படிக்க | இயற்கைக்கு மாற்றே இல்லை! அதிசயமூட்டும் ஆச்சரிய வீடியோக்கள்! ஜாலியா எஞ்ஞாய் பண்ணலாமே!


சென்ற வேலை முடிந்த அடுத்த நொடியே, ஆட்டுமந்தையின் உள்ளே புகுந்து, எதிர்திசையில் லாவகமாக வெளியே வந்து தன்னுடைய இடத்தில் படுத்துக் கொள்ளும் நாய்க்குட்டியைப் பார்த்து பாராட்டலாம் என தோன்றுகிறது. இப்படிப்பட்ட வைரல் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகும்போது, கேள்விப்பட்ட பல விஷயங்களை நேரடியாக பார்த்து உணர முடிகிறது.


நீங்கள் பார்த்து உங்களுக்கு என்ன தோன்றுகிறது என சொல்லுங்கள். எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை ஆயிரக்கணக்கானவர்கள் பார்த்து மகிழ்ந்துள்ளனர். 


மேலும் படிக்க | ஒரு நொடி தாமதத்தால் உயிர் பிழைத்த அதிர்ஷ்டசாலி! நிலச்சரிவில் இருந்து தப்பித்த வீடியோ வைரல்...


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ