வைரல் வீடியோ: வேட்டைக்குச் செல்பவர்கள் ஆபத்தான காரியத்தில் ஈடுபடுவது தெரிந்து தான் அந்த காரியத்தில் துணிச்சலாக இறங்குகிறார்கள். வேட்டையாடுவது என்பது வீரத்தின் அடையாளம் என்று அனைவரும் கருதுவதால் வேட்டை என்பது எப்போதும் மதிப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விலங்குகள் இரைக்காக பிற உயிரினங்களை வேட்டையாடுவது அவற்றின் இயல்பு. ஆனால், மனிதர்கள் பலவிதமான காரணங்களுக்காக வேட்டைத் தொழிலில் ஈடுபடுகின்றனர்.


ஆனால் வலிமை மிகுந்த விலங்குகளை வேட்டையாடும்போது துல்லியமாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும். காட்டுப்பன்றிக்கு மிகவும் வலிமை அதிகம். அது மிகப்பெரிய விலங்கையும் அசால்டாக அடித்து துவம்சம் செய்துவிடும்.


மேலும் படிக்க | முட்டையைப் பார்த்தா கோபம் வரலாமா: சீறும் சர்ப்பங்கள்


வேட்டைக்கு சென்ற ஒருவர் அசால்டாக நடந்து செல்லும்போது, வேறொரு விலங்கை துரத்தி வந்த காட்டுப்பன்றி, குறியை மாற்றி திடீரென வேட்டைக்காரரை வந்து மோதி தாக்கத் தொடங்கியது. இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி, சிறந்த வைரல் வீடியோ என்ற பெயரை பெற்றுள்ளது.


தன்னை துரத்தி வந்த காட்டுப்பன்றியிடம் இருந்து தப்பித்து ஓடிக் கொண்டிருந்த விலங்கும் அங்கு வந்துவிட்டது. வேட்டையாட வந்த மனிதரோ கடுமையான விலங்கின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முயற்சிக்கிறார்.


குறி தப்பியதால் அதிர்ஷ்டவசமாக தப்பிய விலங்கும், வேட்டைக்காரரிடம் வந்துவிட்டது. சில கணங்களே ஓடும் இந்த வீடியோவில் திகைப்பும் அச்சமுமே மிஞ்சுகிறது. இறுதியில் என்ன ஆயிற்று. வேட்டைக்காரர் தப்பித்தாரா என எதுவும் தெரியவில்லை. பதைபதைக்க வைக்கும் வீடியோ இது...



கொடும் கோபத்தில் இருக்கும் ஒரு காட்டுப்பன்றி மிகவும் ஆபத்தானது என்பதால் ஆபத்தின் அளவை அளவிட முடிகிறது. எவ்வளவு தொலைவில் இரைக்கான விலங்கு இருந்தாலும், துரத்திச் சென்றே அடித்து வேட்டையாடும் காட்டுப்பன்றி மிகவும் வலிமை வாய்ந்தது.


மேலும் படிக்க | போச்சா....: சீன் போட போய் சட்டை பறிபோன பரிதாபம், வைரல் வீடியோ


அப்படியான வீடியோ ஒன்றுதான் காண்போரை பதைபதைக்க வைக்கிறது. வேகமாக ஓடிவநது தாக்கும் காட்டுப்பன்றி வேட்டையாட வந்த மனிதரை முரட்டுத்தனமாக மோதுகிறது. இந்தத் தாக்குதலில் யாருக்கு வெற்றி என்று தெரியவில்லை என்பது பதைபதைபுக்கு காரணமாக இருக்கிறது.


அதிலும், வேட்டையாடச் சென்றவரின் கால்களுக்கு இடையில் புகுந்த முரட்டு விலங்கு, அவரை என்ன செய்ததோ என்று அச்சமாக இருக்கிறது. இந்தக் காட்சி பார்க்கும் ஒவ்வொருவருக்கும் பதைபதைக்க வைக்கிறது.  


மேலும் படிக்க | போர்வையை பேய் என நினைத்து பயந்து ஓடிய யானைக்குட்டி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR