வித்தியாசமான உணவு பொருட்கள் விரைவில் மக்களை கவர்ந்துவிடும்.  அந்த வகையில் நெருப்பு பீடா, நெருப்பு பானி பூரி, நைட்ரஜன் பிஸ்கட்டுகள், டல்கோனா நூடுல்ஸ், நெருப்பு மோமோஸ், பானி பூரி ஐஸ் கிரீம் போன்ற பல வகையான வித்தியாசமான உணவுகள் சமீப காலமாக அதிகம் பிரபலமடைந்து வருகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | மணமகனை அடித்து வெளுத்த மணமகள் வீட்டார்: வைரல் வீடியோ


அந்த வகையில் தெருவோர பண்டங்களில் மக்களால் அதிகம் விரும்பப்படும் பானி பூரியில் வித்தியாசமான ஒரு சுவையை சேர்த்து ஒருவர் வெளியிட்டிருக்கும் வீடியோ தற்போது இணையத்தை வட்டமடித்து வருகின்றது.  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சடோர் பிரதர்ஸ் என்ற பெயரில் உள்ள கணக்கில் பகிர்ந்த வீடியோ தான் வைரலாகி வருகிறது.


ஜெய்ப்பூரில் உள்ள ஒரு பானி பூரி கடையில் நடந்த சம்பவம் தான் இது.  அந்த வீடியோவில் பானி பூரி விற்பனையாளர் ஒரு பெரிய மிரண்டா பாட்டிலை எடுத்து நன்கு குலுக்கி ஒரு பெரிய பாத்திரத்தினுள் ஊற்றுகிறார்.  பின்னர் பானி பூரியை எடுத்து அதனுள் உருளைக்கிழங்கு மசாலாவை திணித்தவர் அதன் பின்னர் பானி தண்ணீராக பதிலாக அந்த குளிர்பானத்தை ஊற்றுகிறார்.  அந்த பானி பூரியை எடுத்து சுவைக்கும் அவர் அருமையாக உள்ளதாக கூறுகிறார்.


 



அந்த வீடியோ தற்போது அதிகமான இணையவாசிகளை கவர்ந்ததோடு இதுவரை 3 மில்லியன்களுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கடந்து இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.  இந்த வித்தியாசமான சுவை கொண்ட பானி பூரி வீடியோவிற்கு பலரும் கேலியான கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


ALSO READ | Viral Video: இது ‘சைவ’ பூனை; மீனை பார்த்தாலே வாந்தி எடுக்கும் பூனை..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR