வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்களில் சிங்கம், புலி, குரங்கு, யானை, நாய் ஆகிய மிருகங்களின் வீடியோக்களுக்கு தனி மவுசு உள்ளது. குரங்குகள் பொதுவாக மனிதர்கள் செய்யும் வேலைகளை அப்படியே செய்கின்றன. இந்த உலகில் சில விஷயங்கள் எப்போதும் மாறாது. அதில் தாயன்பும் ஒன்றாகும். மனிதர்கள் ஆனாலும் சரி, விலங்குகள் ஆனாலும் சரி, ஒரு தாய் தன் குழந்தைகள் மீது வைத்திருக்கும் அன்பையும், குழந்தைகளை பாதுக்காக்க எடுத்துக்கொள்ளும் அக்கறையையும் யாராலும் ஈடுகட்டமுடியாது. 


இதை எடுத்துக்காட்டும் மற்றொரு வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இதில் ஒரு தாய் குரங்கு தன் குட்டியைக் காப்பாற்ற தன்னைத்தானே பல கஷ்டங்களுக்கு ஆளாக்கிக்கொள்கிறது. ஒரு படகில் தாய் குரங்கு ஒன்று அதன் குட்டியுடன் இருக்கிறது. அங்கு வரும் இரு நாய்கள் குட்டி குரங்கை தாக்க பல வழிகளில் முயற்சி செய்கின்றன. 


ஆனால், தாய் குரங்கு விட்டு விடுமா? நீண்ட நேரம் அந்த இரண்டு நாய்களுடன் தாய் குரங்கு போராடுகிறது. நாய்கள் தாய் குரங்கை கடித்து கடும் வலியை ஏற்படுத்துகின்றன. அதன் கையில் இருந்து குட்டியை பிடுங்க பல வழிகளில் முயற்சி செய்கின்றன. எனினும், குரங்கு தனது குட்டியை கெட்டியாக பிடித்துக்கொண்டிருக்கிறது. தனது பிடியிலிருந்து அதை விடவே இல்லை. 


மேலும் படிக்க | திக்..திக் நொடிகள்..கண்ணுக் குட்டியை கவ்விய 18 அடி மலைப்பாம்பு: வைரல் வீடியோ 


இந்த காட்சியை பார்க்கும் நமக்கு மனம் பதபதைக்கிறது. குரங்கு தனது குட்டியுடன் எப்படியாவது தப்பித்து விட வேண்டும் என மனம் ஏங்குகிறது. இங்கும் அங்குமாக ஓடி கிரங்கு தனது குட்டியை காக்க முயற்சிக்கின்றது. பின்னர் படகின் மறு பக்கத்திற்கு அருகில், ஒரு மரக் கம்பம் இருப்பதை காணும் குரங்கு சடாரென்று அங்கு சென்று அதன் மீது ஏறிக்கொள்கிறது. அதன் பின்னர்தான் அதற்கு நிம்மதி கிடைக்கிறது. நமக்கும் இதை பார்த்த பின் தான் மனதுக்கு அமைதி கிடைக்கிறது. 


குரங்கின் தாய்ப்பாசத்தை விளக்கும் வீடியோவை இங்கே காணலாம்:



இந்த வீடியோ ட்விட்டர் பயனரால் பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், 'தன் குழந்தையை காக்க ஆச்சரியமளிக்கும் வகையில் செயல்படும் தாய்’ என தலைப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ இதுவரை 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியூஸ்களையும் ஏகப்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது. இதற்கு இணையவாசிகள் பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். குரங்கை பலர் பாராட்டி வருகின்றனர். அதே சமயம் குரங்கை காப்பாற்றாமல், வீடியோ எடுத்துக்கொண்டிருந்த நபரையும் பலர் சாடி வருகின்றனர். 


மேலும் படிக்க | ஆசையாய் ஊட்டி விட்ட மணமகன், வெச்சி செஞ்ச மணமகள்: ஷாக் கொடுக்கும் வைரல் வீடியோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ