வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அம்மா என்ற வார்த்தையே அன்பு, பாசம், நேசம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வார்த்தையாகும். மனிதர்கள் மட்டுமல்ல, விலங்குகளின் தாயன்பும் அதிகபட்ச வியப்பை அளிக்கும் வண்ணம் அமைந்துள்ளது. விலங்குகளின் தாயன்பை விளக்கும் பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளன. அப்படி மீண்டும் ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


ஒரு லங்கூர் குரங்கு தன் குட்டியின் மீது வைத்துள்ள பாசத்தை இந்த வீடியோவில் தெள்ளத்தெளிவாக காண முடிகின்றது. இந்த வீடியோ தாயன்பின் அழகான மற்றும் அற்புதமான உதாரணத்தைக் காட்டுகிறது. இந்த வீடியோவில், தன் குட்டியை தன்னிடம் வைத்துக்கொள்ள அந்த குரங்கு படும் பாட்டை பார்த்தால் நமக்கே பாவமாக இருக்கிறது. ஆனால், இதை அது மிக அமைதியான முறையில் செய்கிறது. மறுபுறம், இந்த வீடியோவில் மற்றொரு கோணமும் நமக்கு காணக்கிடைக்கின்றது. ஒரு சிறுமிக்கு குரங்கு குட்டி மீது உள்ள பாசமும், அதற்காக அது தாய் குரங்கிடம் மன்றாடும் விதமும் காண மிக கியூட்டாக உள்ளது.


மேலும் படிக்க | Flowering Buds: பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்ததில்லையா? இதோ அதிசய அற்புத வீடியோ


இந்த வீடியோவில், ஒரு சிறிய பெண், குரங்கு குட்டியை தனது மடியில் வைத்துக்கொள்ள ஆசைப்படுவதை காண முடிகின்றது. ஆனால், குழந்தையை பிரிய தாய் குரங்குக்கு மனம் வரவில்லை. தாய் குரங்கிடமிருந்து குட்டியை பெற சிறுமி பல வகைகளில் முயற்சிக்கிறார். ஆனால், தாய் குரங்கு குட்டியை கெட்டியாக பிடித்துக்கொண்டு அங்கும் இங்கும் செல்கிறது. அந்த சிறுமியை தவிர்க்க முயற்சிக்கிறது.


54 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவில், ஒரு கட்டத்தில் சிறுமி குட்டி குரங்கை தாய் குரங்கிடமிருந்து பெற்று விடுகிறார். அதை ஆசையாக கொஞ்சிக்கொண்டு அங்கிருந்து நகர்கிறார். ஆனால், தாய் குரங்கு அவர் பின்னாலேயே வந்து குட்டியை மீண்டும் வாங்கிக்கொள்கிறது. இதனால் மனம் உடைந்த சிறுமி, குழந்தையை தன்னிடம் தரச்சொல்லி தாய் குரங்கிடம் பேசுகிறார். இது பார்ப்பதற்கு மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால், சிறுமி குட்டியை பெற்றபோது தாய் குரங்கும் அவர் மீது கோவப்படவில்லை, அது மீண்டும் குட்டியை பெற்ற போது சிறுமியும் அதன் மீது கோவப்படவில்லை. இவர்களுக்கு இடையே பாசப்போராட்டமே நடக்கின்றது. 



இந்த வீடியோ மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டரில் @MahantYogiG என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இந்த சம்பவம் எப்போது, ​​எங்கு நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இதற்கு இணையவாசிகள் பல வித கமெண்டுகளையும் அளித்து வருகிறார்கள். 


மேலும் படிக்க | 20 அடி நீள இரண்டு மலைப்பாம்புகள்: நடுங்க வைக்கும் வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ