வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாம்புகள் இணையத்தின் ஹீரோக்கள் என்றே கூறலாம். பாம்புகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் தினமும் பகிரப்படுகின்றன. தற்போதும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது.


ஒரு பாம்பால் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் காணப்படும் ஒரு நபரின் வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. நடைபயணத்தின் போது ஒரு பாம்புக்கு மிக அருகில் சென்றதால் ரத்தம் கொட்டும் அளவு காயம் ஏற்பட்ட ஒரு ஆஸ்திரேலியரின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகின்றது. 


ஜோய் ஜெய்ன் அன்ற அந்த நபர், கெய்ர்ன்ஸில் உள்ள பெஹானா பள்ளத்தாக்கில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு மரத்தில் மலைப்பாம்பைக் கண்டார். அதை நெருக்கமாகப் பார்ப்பதற்கு அவர் முனைந்தார். தனது கேமராவில் அதை படம் பிடிக்க எண்ணி கேமராவைத் துடைத்தார். ஆனால், அதற்கு பிறகு நடந்த விஷயங்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. 


ஆன்லைனில் பகிரப்பட்ட வீடியோவில், “பெஹானாவுக்கு சற்று மேலே ஒரு அழகான பாம்பு." என ஜோயி கூறுவதை கேட்க முடிகின்றது. ஆனால், அந்த மலைப்பாம்புக்கு தன்னை ஒருவர் படம் எடுப்பது பிடிக்கவில்லை போலிருக்கிறது. தனது தனிப்பட்ட இடத்தை ஒருவர் ஆக்கிரமித்து தன்னை தொந்தரவு செய்ததை அது விரும்பவில்லை. 


மேலும் படிக்க | வைரல் வீடியோ: கடவுளே காப்பாத்திரு... எக்ஸாமில் சாமி கும்பிட்டு விடை எழுதும் சிறுவன்


திகிலூட்டும் அந்த வீடியோவை இங்கே காணலாம்: