வைரல் வீடியோ: கடவுளே காப்பாத்திரு... எக்ஸாமில் சாமி கும்பிட்டு விடை எழுதும் சிறுவன்

இப்போது தேர்வு காலம் தொடங்கியிருக்கும் நிலையில், பள்ளி சிறுவன் ஒருவன் சாமி கும்பிட்டு பரீட்சை எழுதும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இப்படி தான் பல மாணவர்களின் மன நிலை இப்போது இருப்பதாக நெட்டிசன்கள் கிண்டலடித்துள்ளனர்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 17, 2023, 09:42 AM IST
வைரல் வீடியோ: கடவுளே காப்பாத்திரு... எக்ஸாமில் சாமி கும்பிட்டு விடை எழுதும் சிறுவன் title=

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இப்போது தேர்வு காலம் தொடங்கிவிட்டது. எல்லோரும் ஒருவிதமான பீதியில் இருக்கிறார்கள். எந்த கேள்வி வந்தாலும் அதற்கு அசராமல் பதிலளித்துவிடலாம் என்ற தெம்புடன் சில குழந்தைகள் இருந்தாலும், ஒரு சிறிய அச்சத்துடன் இருப்பவர்களும் உள்ளனர். அது மாணவர்களுக்கே இருக்கும் உளவியல். அவர்களை பொறுத்தவரை தேர்வு என்பது எட்டிக்காய் கசப்புதான். தேர்வில் என்ன கேட்கபோகிறார்கள்? என்பது பரம ரகசியம் என்பதால், தேர்வு அறைக்கு சென்று வினாத்தாளை பார்க்கும் வரை படபடப்பு இருந்து கொண்டே இருக்கும்.

படித்திருக்கிறோமோ? இல்லையோ? வினாத்தாளில் என்னமாதிரியான வினா இருக்கிறப்போகிறது என்பது தான் தேர்வு எழுதுவதற்கு முன்பு இருக்கும் மிகப்பெரிய பயம். படிக்கும் மாணவர்களைப் பொறுத்தவரை பிரச்சனை இருக்காது. அவர்களுக்கு என்ன கேள்வி வந்தாலும் எழுதிவிடுவார்கள். படிக்காதவர்கள் அல்லது கொஞ்சம் படித்தவர்கள் எக்ஸாம் ஹாலில் செய்யும் சேட்டை தான் தனி ரகமாக இருக்கும். வினாத்தாளில் இருக்கும் கேள்விக்கும், இவர்கள் எழுதும் பதிலுக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இருக்காது. கேள்விக்கு பதிலை படித்து பார்க்கும் ஆசிரியர்கள், தலையை எங்கு கொண்டு முட்டிக் கொள்வது விரக்தியின் உச்சத்துக்கே கூட சென்றுவிடுவார்கள். 

மேலும் படிக்க | Viral Video: திருமண மேடையில் கட்டிபிடித்து உருண்ட மணமக்கள்... இதுதான் செல்ல சண்டையோ!

சினிமா பாடல்கள் முதல் வீட்டு குழம்பு செய்முறை வரை என அனைத்தும் இவர்களின் விடைத்தாளை அலங்கரிக்கும். கல்லூரி பருவத் தேர்வு விடைத் தாள்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை. அப்படி, சரமாரியாக தங்கள் இஷ்டத்துக்கு எழுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களும் கூட இருப்பார்கள். ஆனால் இங்கு வைரலாகியிருக்கும் வீடியோவில் சிறுவன் தேர்ச்சி பெற்றானா? இல்லையா? தெரியாது. ஆனால் இவருடைய வீடியோ சோஷியல் மீடியாவில் ஹிட். 

தேர்வு ஹாலில் உட்கார்ந்திருக்கும் சிறுவன், விடைத்தாளில் விடை எழுதுவதற்கு ஒவ்வொரு முறையும் கைக்கூப்பி சாமி கும்பிட்டுவிட்டு விடையைக் குறிக்கிறார். கேள்வி என்ன? பதில் என்ன? என்பது அந்த சிறுவனுக்கு மட்டுமே தெரியும். டிவிட்டரில் வைரலாகியிருக்கும் வீடியோவில், நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ரீ டிவீட் செய்துள்ளனர். 

மேலும் படிக்க | அடங்கப்பா..ஜெட் வேகத்தில் ஓடி வந்த சிறுத்தை..பதற வைக்கும் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News