கூடிய விரைவில் தாய்மை அடைய இருப்பதினை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானிய மிர்ஷா தன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஷா மற்றம் சொயிப் மாலிக் தம்பதியருக்கும் விரைவில் குழந்தை பிறக்கவுள்ளது. இதுகுறித்த அறிவிப்புகளை இத்தம்பதியர் சற்று வித்தியாசமான முறையின் முன்னதாகவே அறிவித்து விட்டனர்.


இந்திய டென்னிஸ் வீராங்கனை சானிய மிர்ஷா மற்றும் பாக்கிஸ்தான் கிரிக்கெட் வீரர் சொயிப் மாலிக் இருவரும் காதலித்து திருமணம் செய்துக்கொடணர். சமீபத்தில் தங்களது 8-ஆம் ஆண்டு திருமண நாளினை கொண்டாடிய இத்தம்பதியர் தற்போது தங்கள் குடும்பத்தில் புதிய உறுப்பினர் இணைய உள்ளதாக தங்களது ட்விட்டர் பக்கத்தினில் பதிவிட்டனர்.


மிர்ஷா, மாலிக் என பெயரிடப்பட இரண்டு t-shirt க்கு இடையில் ஒரு சிறிய t-shirt ஆனது மிரிஷா மாலிக் என்னும் பெயரில் இடம்பெற்றுள்ள புகைப்படம் ஒன்றினை இந்த ஜோடி தங்களது ட்விட்டர் பக்கத்தினில் பதிவிட்டு தங்களது குடும்பத்தின் புதிய வரவினை குறித்த செய்தியினை உறுதிப்படுத்தினர்.


இந்நிலையில் தற்போது சானிய, நிரைமாத கர்ப்பிணியாக இருக்கும் சமீபத்திய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இவர் விரைவிலேயே தாய்மை அடைய இருப்பதினை காட்டுகிறது.




31-வயது ஆகும் இந்த இந்திய வீராங்கனை தனது காதலை குறித்தும், திருமணத்தினை குறித்தும் தெரிவிக்கையில் இந்திய நாடே கொந்தளித்தது. இந்தியரான ஒருவர் எப்படி எதிரி நாடான பாக்கிஸ்தானியரை திருமணம் செய்துக்கொள்ளலாம் என குரல்கள் எழுந்தன. ஆனால் இந்த தடைகளை எல்லாம் மீறி திருமணம் செய்துகொண்ட இத்தம்பதியர் தற்போது அமைதியான மற்றும் மகிழ்சியான வாழ்க்கையினை நடத்திவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.