வைரல் வீடியோ: மனிதர்களாக இருந்தாலும் சரி விலங்குகளாக இருந்தாலும் சரி, அனைவருக்கும் பசி என்பது இயல்பான ஒரு உணர்வாகும். இரு வேளை சாப்பாட்டிற்காக மக்கள் கடுமையாக உழைக்கிறார்கள். இரவும் பகலும் பல இன்னல்களை சகித்துக்கொண்டு உழைத்து தங்களது வயிற்றையும், தங்கள் குடும்பத்தாரின் வயிற்றையும் நிரப்ப முயற்சி செய்கிறார்கள். மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகளும் உணவுக்காக கடினமாக உழைக்க வேண்டி இருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒப்பீட்டளவில் காடுகளில் இருக்கும் விலங்குகளுக்கு மற்ற இடங்களில் இருக்கும் விலங்குகளை விட சற்று எளிதாக உணவு கிடைத்து விடுகிறது. ஆனால், மக்கள் வசிக்கும் இடங்களில், நகர்ப்புறங்களில் இருக்கும் விலங்குகள் உணவுக்காக மனிதர்களை நம்பியிருக்கின்றன. மனிதர்களின் எஞ்சிய உணவை உண்ண அவை காத்திருக்கின்றன. மாடுகள் முதல் நாய்கள் வரையிலான விலங்குகள் குப்பையில் உணவைத் தேடிச் செல்வது அடிக்கடி காணப்படுகிறது. 


விலங்குகள் உணவுக்காக போராடும் பல வீடியோக்களும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன. சில பகுதிகளில் தங்களுக்கு தேவையான உணவு கிடைக்காததால், குரங்குகள் மனிதர்களிடமிருந்து உணவை பறிப்பதையும் நாம் பார்த்துள்ளோம். நம்மில் பலர் விலங்குகளுக்காக பிரத்யேகமாக சென்று உணவளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளோம். பொதுவாக விலங்குகளுக்கு உணவளிப்பது நல்ல விஷயமாகவும் பார்க்கப்படுகின்றது. ஆனால், சில சமயம் இதற்கு நேர்மாறான விஷயங்களும் நடப்பதுண்டு.


லங்கூர் குரங்கை ஏமாற்றிய நபர்கள்


சமீபத்தில், ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. இதில் ஒரு நபர் தனது வீட்டின் மொட்டை மாடியில் லங்கூர் குரங்குக்கு உணவளிப்பது போல ஒரு ஏமாற்று வேலையை செய்கிறார். குரங்குக்கு முன்னால் ஒரு ரொட்டியை வைத்து அதை உண்மையில் அவர் மிக மோசமாக ஏமாற்றுகிறார். இந்த வீடியோவை பார்த்து மக்கள் மிகுந்த கோவமும் வருத்தமும் அடைந்துள்ளனர். ஏனென்றால் விலங்குகளின் துயரத்தையும் இயலாமையையும் நாம் தீவிரத்துடன் எடுத்துக்கொள்ளவில்லை என்பதை இந்த வீடியோ காட்டுகிறது.


மேலும் படிக்க | சீண்டிய நபரை சும்மா விடுமா குரங்கு? அடாக் செய்த குரங்கு, நொந்துபோன நபர், வைரல் வீடியோ


இந்த வீடியோவில், ஒரு நபர் குரங்குக்கு ரொட்டித் துண்டை அளிப்பதன் போர்வையில் அதனுடன் ஒரு மோசமான விளையாட்டை விளையாடியுள்ளார். குரங்கு ஒன்று மொட்டை மாடிக்கு வருவதையும் அதன் எதிரில் ஒரு ரொட்டி வைக்கப்பட்டிருப்பதையும் வீடியோவின் தொடக்கத்தில் காண்கிறோம். அந்த லங்கூர் குரங்கு உடனடியாக அதை எடுக்கச்செல்கிறது. ஆனால், சுவரின் பின்னால் ஒளிந்து கொண்டு வீடியோ எடுத்தவர் தன்னுடன் ஒரு மோசமான விளையாட்டை விளையாடுகிறார் என்பது அதற்கு தெரியவில்லை. 


அந்த நபர் அந்த ரொட்டியுடன் ஒரு போலி பாம்பையும் கட்டி வைத்திருக்கிறார். குரங்கு ரொட்டியை எடுத்தவுடனேயே நிஜ பாம்பு ஓடி வருவது போல அந்த பாம்பு பொம்மையும் வெளியே வருகிறது. தன் முன் பமபு வந்துவிட்டதாக எண்ணி குரங்கு மிகவும் பயந்துவிடுகிறது. சிறிது நேரம் பயத்தில் இருந்த பிறகு, அது பாம்பை மீண்டும் பார்க்கிறது. பின் குழப்பத்தில் தொலைவில் அமர்கிறது. பசியுடன் இருந்த குரங்குடன் அந்த நபர் ஆடிய பொறுப்பற்ற விளையாட்டு மிக தவறான ஒரு செயலாகும். விலங்குகளுக்கு நம்மால் உணவளிக்க முடியாவிட்டாலும், இப்படி ஏமாற்றாமல் இருக்கலாம்.


குரங்கை ஏமாற்றி ஏச்சு வாங்கிய நபரின் வீடியோவை இங்கே காணலாம்:



இன்ஸ்டாகிராமில் வீடியோ வைரலானது


மனிதர்களை வெட்கித் தலைகுனிய வைக்கும் இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் "rajasthani_best_song" என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதுவரை இதற்கு ஒரு லட்சத்து 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளும் 28 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களும் கிடைத்துள்ளன. நூற்றுக்கணக்கான பயனர்கள் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ எடுத்த நபரை இணையவாசிகள் சாடி வருகிறார்கள். “இப்படிப்பட்டவர்கள் மனித குலத்தையே இழிவுபடுத்துகிறார்கள்” என ஒருவர் எழுதியுள்ளார். “வாயில்லா ஜீவன்களை இப்படி ஏமாற்ற எப்படி மனம் வருகிறது?” என ஒருவர் தன் வியப்பை வெளிப்படுத்தியுள்ளார்.


மேலும் படிக்க | ‘அந்த’ விஷயத்தை கேட்டு வெறித்தனமாக சிரித்த மணமகள்: மேட்டர் இதுதான்!! வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ