Viral Video: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 


சமூக ஊடகங்களில் (Social Media) பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகள் மற்றும் பறவைகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.


உலகில் உள்ள அனைவரும் அதிகாரம் மற்றும் ஆதிக்கத்தைப் பெறுவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்கள். ஏனெனில், பலசாலியால்தான் உலகில் பயமில்லாமல் வாழ முடியும். இந்த உலகம் பலவீனமானவர்களுக்கானது அல்ல. 


பலவீனமானவர்களை சமூகம் எளிதாக வாழ விடுவதில்லை. உலகில் உள்ள அனைத்து விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளும் பலவீனமானவர்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன. பணக்காரர்கள் மற்றும் சக்திவாய்ந்த நபர்களை யாரும் எதுவும் சொல்வதில்லை. இதனால் அதிகாரத்தை பெறுவதிலேயே அனைவரும் குறியாக உள்ளனர். 


பலத்தின் பெருமை மனிதர்களுக்கு மட்டுமல்ல, இந்த பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் இந்த பெருமை உள்ளது. இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி (Viral Video) வரும் இந்த வீடியோ அதற்கு சாட்சியாக அமைகின்றது. 


ALSO READ | பழங்குடியினரின் சொல்லுக்கு கட்டுப்பட்ட முரட்டு யானை- Video Viral


கோழி தனியாக இருப்பதாக நினைத்து பருந்து தாக்கியது


வீடியோவில் கோழி ஒன்று அதன் கூண்டில் சுற்றித் திரிவதைக் காண முடிகின்றது. அப்போது ஒரு பருந்து வந்து அதைத் தாக்குகிறது. பருந்து கோழியுடன் கடுமையான சண்டையில் ஈடுபடுகிறது. அப்போது, ​​கொழுத்த சேவல் ஒன்று அங்கு வந்து பருந்தை தாக்குகிறது. 


பருந்தை கொத்தி கொத்தி அது கழுகின் சிறகுகளை சேதம் செய்கிறது. சேவல் (Cock) மற்றும் பருந்துக்கு இடையே நீண்ட நேரம் கடுமையான சண்டை நடக்கின்றது. யாரும் நம்ப முடியாத வகையில், சேவலின் முன்னால் பருந்தின் உறுதி பலவீனமாகிவிடுகின்றது. பருந்து மிகுந்த சிரமத்துடன் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்கிறது. 


இந்த வீடியோ, உலகம் பலமானவர்களுக்கானது மட்டுமல்ல, உறுதி இருந்தால், பலவீனமற்றவர்களுக்கும் வெற்றி கிடைக்கும் என்பதை எடுத்துக்காட்டுகிறது. 


சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது


இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் @buitengebieden_ என்ற பெயரில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. 31 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவை இதுவரை 3 லட்சத்து 62 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர். 
இந்த வீடியோவுக்கு இணையவாசிகள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். இந்த வீடியோவைப் பார்த்தால், அனைவர் மனதிலும் நம்பிக்கையும், உறுதியும் கிடைக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. 


ALSO READ | ’இது எங்க ஏரியா..!’ சிங்கத்தின் ஒற்றை பார்வையில் ஓடிய ஓநாய்கள் - Viral Video


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR