கேரளாவின் இயற்கை எழில் கொஞ்சும் பிரதேசம் மூணாறு. உள்ளூர் முதல் உலக சுற்றுலா பயணிகள் வரை படையெடுக்கும் மூணாறில் காட்டு விலங்குகள், தேயிலை தோட்டங்கள், ஏரி, மலை முகடுகள் உள்ளிட்ட இயற்கையின் பேரழகை கண்டு ரசிக்கலாம். இதற்காகவே மூணாறுக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இப்போது மழை பெய்து பசுமை போர்த்திய இடமாக காட்சியளிப்பதால் விடுமுறை நாட்களை கொண்டாட அங்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | மாஸ்டர் பிளான் போட்டு தப்பித்த பசுமாடு: பல்பு வாங்கிய சிங்கங்கள், வைரல் வீடியோ 


அவ்வாறு சென்ற சுற்றுலா பயணிகளுக்கு காண்பதற்கு அரிய காட்சி ஒன்றும் கிடைத்துள்ளது. அதாவது மலைப்பகுதி வழியே பயணிக்கும்போது சாலையிலேயே இரண்டு காட்டெருமைகள் முட்டி மோதிக்கொண்டு சண்டையிட்டுள்ளன. ஆக்ரோஷமாக சண்டையிட்ட காட்டெருமைகளைப் பார்த்து சுற்றுலா பயணிகள் ஷாக்கானாலும், உளப்பூர்வமாக மகிழ்ச்சியடைந்தும் உள்ளனர். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.



அந்த வீடியோவில் காட்டெருமைகள் இரண்டும் நீண்ட நேரமாக காட்டிற்குள் சண்டையிட்டு ஓடி வருகின்றன. திடீரென சாலையில் விழுந்து எழுந்தும் சண்டையை நிறுத்தவில்லை. ஆக்ரோஷமாக இரண்டு காட்டெருமைகளும் ஒன்றையொன்று தாக்கிக் கொள்கிள்கின்றன. அங்கு படம்பிடித்த இந்த வீடியோவை சிலர் டிவிட்டர் உள்ளிட்ட இணைய பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். 


மேலும் படிக்க | அம்மானா சும்மாவா: பாம்பை பதம் பார்த்த கோழி, ஆச்சரியத்தில் நெட்டிசன்கள், வைரல் வீடியோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ