Shark Viral Video: கடல் எப்போதுமே பிரமிப்பை தரும் ஒரு விஷயம் எனலாம். உங்களால் சமதளத்தில் நின்றுகொண்டு பரந்துவிரிந்து கிடக்கும் அந்த கடலை பார்த்தாலே இந்த உலகம் எவ்வளவு பெரியது என்ற எண்ணம் உங்கள் மூளையை தாக்கும். நிலத்தை போலவே கடலும் தனி உலகம் எனலாம். நிலத்தை வாழும் உயிரினங்களை போன்று கடலிலும் கோடிக்கணக்கான உயிரினங்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. அதேபோல், மீனவர்கள் வாழ்விலும் கடல் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குறிப்பாக கடல் சார்ந்து வாழும் மனிதர்களை மீனவர்கள் என்ற அழைப்பதே தவறு எனலாம். அவர்களை நாம் கடலோடிகள் என்றே அழைக்க வேண்டும். நிலப்பகுதிகள் முழுவதும் சுற்றித் திரிபவர்களை நாடோடிகள் என கூறுவதை போன்று கடலையே உலகமாக வைத்து அங்கு சுற்றித்திரியும் மக்களை நாம் கடலோடிகள் என அழைப்பதே சரியாக இருக்கும். ஏனென்றால் அவர்கள் மீன்களை மட்டும் அங்கு பிடிக்கவில்லை. தங்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் அந்த கடலோடு பிணைத்துகொள்கிறார்கள் எனலாம்.


சுறா மீனின் வைரல் வீடியோ


அதேபோன்று அவர்கள் கடலுக்கே ராஜா என்றும் நினைக்கக் கூடாது. எப்படி மனிதனின் பேராசையால் காடுகள் அழிக்கப்படுகிறதோ, அதேதான்... நமது பேராசையால் கடல் வளங்கள் சுரண்டப்படுவதையோ, அழிக்கப்படுவதையோ அனுமதிக்கக் கூடாது. ஏனென்றால் எண்ணற்ற உயிரினங்கள் கடலையே நம்பி வாழ்ந்து வரும் சூழலில், நமது ஆறாம் அறிவின் விளைவால் வரும் ஆபத்துகளால் அவை பாதிக்கப்படுவது ஏற்கத்தக்கது அல்ல. இப்படி கடலும் நமது சுற்றுச்சூழலில் முக்கிய இடத்தை பிடிக்கிறது.


மேலும் படிக்க | நீர்நாயை பார்த்ததும் குஷியான வாகன ஓட்டிகள்! நீங்களும் சிரிப்பீங்க...வைரல் வீடியோ..!


அந்த வகையில், தற்போது கடலில் நடந்த ஒரு பயங்கர சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கடலோடி ஒருவர் சிறிய படகில் கடலில் சென்றுகொண்டிருக்கும்போது ஒரு சுறா மீனுடன் மோத வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அந்த சுறா மீன் அவரின் படகையே வட்டமிட்டு வந்த நிலையில் அதனை தனது துடுப்பை வைத்து அந்த நபர் தாக்கும் வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வைரல் வீடியோ பல விவாதங்களை கிளப்பியிருக்கிறது.