பாம்பை பார்த்தால் படையும் நடுங்கும் என்று சொல்வார்கள். பலர் பாம்புகளை பார்த்து பயந்தாலும் உலகெங்கிலும் உள்ள பலர் அவற்றை செல்லப்பிராணிகளாக வளர்க்கிறார்கள். சமீபத்தில், ஒரு சிறுமி தனது தோளில் ஒரு பெரிய கருப்பு பாம்புடன் விளையாடும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இணையம் முழுவதும் அனைவரையும் இந்த வீடியோ ஆச்சரியப்பட வைத்துள்ளது. வைரலான இந்த வீடியோவில், அந்த சிறுமி கருப்பு நிறத்தில் உள்ள பெரிய பாம்பை கழுத்தில் சுற்றி விளையாடுகிறார். ஏதோ பொம்மையுடன் விளையாடுவது போல பேசி சிரித்து கொண்டு இருக்கிறார். ஆனால் அதிர்ஷ்டவசமாக, பாம்பு அமைதியாக இருக்கிறது மற்றும் அந்த சிறுமியை எதுவும் செய்யவில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இந்த எருமையின் விலை 23 கோடியா! என்ன காரணம் தெரியுமா?


இந்த சிறுமியின் பெயர் அரியானா, உண்மையில் இவர் ஒரு பாம்பு ஆர்வலர். இவரது சாகசங்களை பார்ப்பதற்காகவே இன்ஸ்டாகிராமில் அவரைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 400,000 க்கும் அதிகமாக உள்ளது. @snakemasterexotics என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் ஐடி வைத்துள்ளார். "Just a girl and her passion for snakes" என்று இன்ஸ்டாகிராம் பயோவில் வைத்துள்ளார். வைரலான இந்த வீடியோவில், அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு கழுத்தில் ஒரு பெரிய பாம்பை சுற்றிக் காட்டுகிறார். பாம்புகளை எப்படி பாதுகாப்பாக கையாள்வது என்று தனக்குத் தெரியும் என்பதால் கவலைப்பட வேண்டாம் என்று எல்லோரிடமும் சொல்கிறாள். "பாம்புகளை ஒரு சார்பு போல கையாள்வது-எனக்கு இன்னொரு நாள்'' என்று இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.



இந்த வீடியோ இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆன்லைனில் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்துவதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். பலர் அந்த சிறுமியின் பெற்றோர்கள் மீது தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி உள்ளனர். தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருப்பதை விட சமூக ஊடகங்களில் பிரபலமாக இருப்பதைப் பற்றி அதிகம் கவலைப்படுவது புத்திசாலித்தனம் அல்ல என்றும் தெரிவித்துள்ளனர். 


ஒரு பயனர், ''என்ன மாதிரியான பெற்றோர்களோ, ஏழைப் பிள்ளைக்கு ஆபத்து தெரியாது'' என்று பதிவிட்டுள்ளார். மற்றொருவர், ''யாராவது இந்த சிறுமியின் பெற்றோரை கைது செய்து, அந்த குழந்தைக்கு வேறு குடும்பத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார். மற்றொரு நபர், 'தங்கள் குழந்தைகளுக்கு எது சிறந்தது என்பதைப் பற்றி ஏன் சிந்திக்கவில்லை" என்றும், ''இது சரியில்லை என்றும், அவளுடைய பெற்றோர் அவளை சரியாகக் கவனித்துக் கொள்ள வேண்டும்'' என்றும் பதிவிட்டுள்ளனர்.


மேலும் படிக்க | காரை தண்ணீரில் ஓட்டி லைசன்ஸ் வாங்கும் நபர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ