சனி வக்ர பெயர்ச்சி 2022: சனி கிரகம் இரண்டரை ஆண்டுகளில் ராசியை மாற்றுகிறது. 2022 ஆம் ஆண்டில், சனி கிரகம் இதுவரை 2 முறை ராசியை மாற்றியுள்ளது. நீதி தேவனான சனி பகவான் கடந்த 12 ஜூலை 2022 அன்று  மகர ராசிக்குள் நுழைந்த நிலையில், ஜனவரி 17, 2023 வரை சனி இந்த ராசியில் இருப்பார். சனி தற்போது வக்ர நிலையில் உள்ள நிலையில்,  இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும்  காணப்படும் என்றாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த சஞ்சாரம், வக்ர பெயர்ச்சி காரணமாக சுப பலன்கள் கிடைக்கும். சனி  நீதி கடவுளாகவும், செயல்களுக்கு ஏற்ற பலன்களை கொடுப்பவராகவும் கருதப்படுகிறார். சனி வக்ர நிலையில் இருப்பதால் மூன்று ராசிக்காரர்களின் ஜாதகத்தில் ராஜயோகம் உருவாகி வருகிறது என ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷம்:


ஜோதிட சாஸ்திரப்படி சனியின் வக்ர பெயர்ச்சியினால் இந்த ராசியில்  தன ராஜயோகம் உருவாகிறது. இந்த யோகம் தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றத்தை தரும். மேஷ ராசிக்காரர்களின் பெயர்ச்சி ஜாதகத்தில் ருச்சக், ஷஷ் என்ற ராஜயோகம் உருவாகி வருகிறது. இந்த யோகங்கள் மிகவும் மங்களகரமானதாகவும் பலனளிக்கக் கூடியதாகவும் கருதப்படுகிறது. இதன் காரணமாக, நபருக்கு திடீர் பண ஆதாயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த காலகட்டத்தில், ராயல்டி வருமானமும் பெறலாம். சுக்கிரன் மற்றும் வியாழன் சொந்த ராசியில் இருப்பதால் புதிய வேலை வாய்ப்பு வரலாம். இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டம் குறையாமல் இருக்கும்.


மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி 2022: சனி மகாதசையில் இருந்து தப்பிக்க செய்ய வேண்டியவை!


மிதுனம்:


இந்த ராசியில் தன ராஜ யோகம் அமைவதால் அதிர்ஷ்டம் முழுமையாக துணை நிற்கும். சனி சக்ர பெயர்ச்சி காலத்தில், மிதுன ராசிக்காரர்களின் ஜாதகத்தில் பத்ரா, ஹன்ஸ் என்ற ராஜயோகம் உருவாகி வியாபாரத்தில் நல்ல லாபத்தைத் தரும்.  சனி பெயர்ச்சி காலத்தில், மரியாதையும் கௌரவமும் கூடும். அரசியலில் ஈடுபடுபவர்களும் வெற்றி பெறலாம். இந்த நேரத்தில் புதிய வேலை வாய்ப்பும் வரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும், மதிப்பும் கிடைக்கும். குறிப்பாக, வெளிநாடுகளுடன் தொடர்புள்ள வர்த்தகர்களும் ஆதாயமடைவார்கள். 


மேலும் படிக்க | நீதி தேவன் சனி பகவானின் அருளை முழுமையாக பெறும் ‘3’ ராசிகள்


கன்னி:


இந்த ராசிக்காரர்களின் பெயர்ச்சி ஜாதகத்தில், ஹன்ஸ் மற்றும் பத்ரா என்ற ராஜயோகம் உருவாகிறது, இது பெரும் அதிர்ஷ்டத்தை கொண்டு வரும். தடைபட்ட முக்கியமான வேலைகளை முடிக்க முடியும். அதே சமயம் குழந்தை தரப்பிலிருந்தும் நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் இந்த நேரத்தில் வெற்றி பெறுவார்கள். நீங்கள் வணிகம் தொடர்பான பயணங்களை மேற்கொள்ளலாம், இது நன்மை பயக்கும். நீதிமன்ற வழக்குகளிலும் வெற்றி உண்டாகும். 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )


மேலும் படிக்க | Astro: ஏழரை நாட்டு சனி பாதிப்பில் இருந்து தப்பிக்க சில எளிய பரிகாரங்கள்


மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ