சம்சப்தக ராஜ்யோகம் என்பது இரு வலிமை பொருந்திய கிரகங்கள் இணைவதால் உருவாகும் யோகம் ஆகும்.  ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அதன் ராசியை மாற்றுகிறது. இந்த ராசி மாற்றங்கள் எல்லா ராசிக்காரர்களையும் பாதிக்கிறது. சிலருக்கு சுபமான பலன்கள் கிடைத்தால், மற்றவர்களுக்கு அசுபமான பலன்கள் ஏற்படும். சுக்கிரனும் வியாழனும் வரும் அக்டோபரில் இணைந்து சமாசப்தக ராஜயோகம் உருவாக உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமசப்தக ராஜயோகம்


குரு பகவான் தற்போது ரிஷப ராசியில் இருக்கிறார். அக்டோபர் 13ம் தேதி சுக்கிரன் விருச்சிக ராசிக்குள் நுழைகிறார். வியாழனும் சுக்கிரனும் ஏழு வீடுகள் தள்ளி இருக்கும்போது சமசப்தக ராஜயோகம் உருவாகிறது. இந்த ராஜயோகம் 3 ராசிகளுக்கு மிகவும் ஏற்றதாக கருதப்படுகிறது.


சுக்கிரனும், வியாழனும் ஒருவரை மற்றொருவர் 180 டிகிரியில் பார்த்துக் கொள்வார்கள், இந்த இரண்டு கிரகங்களும் 7 ஆம் வீட்டில் ஒருவரையொருவர் தொடர்புகொள்கின்றனர். அறிவு, ஞானம், செல்வம், திருமண மகிழ்ச்சி, குழந்தைகள் மற்றும் ஆன்மீகத்தின் காரணியாக வியாழன் கருதப்படுகிறது.


இன்பங்கள், கலை, இசை, திருமண வாழ்க்கை, செல்வம், மகிழ்ச்சிக்கு பொறுப்பானவர் சுக்கிரன். இந்த சமசப்தக யோகம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நன்றாக உள்ளது என்பதைத் தெரிந்து கொள்வோம்.


ரிஷபம்


சமசப்தக் ராஜயோகம் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு நல்ல செய்திகளைக் கொண்டு வந்து சேர்க்கும்.. உத்தியோகத்தில் இருப்பவர்களின் பிரச்சனைகள் தீரும். ஆசைகள் நிறைவேறும். பொருளாதார நிலையும் முன்பை விட சிறப்பாக இருக்கும். ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சமசப்தக யோகம் மிகவும் சாதகமான பலன்களைக் கொடுப்பதுடன், பழைய பிரச்சனைகளில் இருந்து விடுதலையைக் கொடுக்கும். வாழ்க்கையின் பொன்னான காலமாக இருக்கும் இந்த காலத்தில், நீங்கள் பெயரும் புகழும் அடைவீர்கள்.  


மேலும் படிக்க | எந்த இலையில் தீபம் போட்டால் முருகனின் செல்லப்பிள்ளை ஆகமுடியும்? நிலத் தகராறை தீர்க்கும் தீப வழிபாடு!


தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்தைக் கொடுக்கும் பண வரவிற்கான வாய்ப்புகள் இருக்கும். வெளியில் இருந்து வரவேண்டிய பணம் வந்து சேரும். குடும்ப உறவுகள் வலுவடையும். புதிய ஒப்பந்தத்தைப் பெறும் தொழில் முனைவோருக்கு பெரும் லாபம் கிடைக்கும். வாழ்க்கையில் முன்னேற்றத்தில் பாதையில் செல்கிறோம் என்பதை உணரும் நேரம் இது.


விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு சம்சப்தக ராஜயோகத்தால் நல்ல வாழ்க்கை அமையும். வருமானத்திற்கான புதிய ஆதாரங்கள் கிடைக்கும். நோய் பாதிப்பு இருந்தவர்களுக்கு நோயில் இருந்து நிவாரணம் கிடைக்கும். உத்தியோகம் மற்றும் தொழிலில் வெற்றி பெறுவீர்கள்.


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது)


மேலும் படிக்க | 2024 செப்டம்பர் 27 இந்திர ஏகாதசி! பித்ரு தோஷம் போக்க விஷ்ணுவை வணங்க வேண்டிய நாள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ