ரிஷப ராசியில் புதன் சுக்கிரனின் இணைப்பு: ரிஷப ராசியில் சுக்கிரனும் புதனும் ஒரே நேரத்தில் சஞ்சரிக்கிறார்கள். சுக்கிரனுக்கும் புதனுக்கும் இடையிலான நட்பு உணர்வின் காரணமாக, இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கை சுபமாக கருதப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சனி அதன் மூல முக்கோண ராசியில் சுமார் 30 ஆண்டுகள் இருக்கிறார். இந்த கிரக நிலையால் ரிஷபம், சிம்மம் உள்ளிட்ட 4 ராசிக்காரர்களின் ஜாதகத்தில் சஷ்சம், மாளவ்யா என்ற ராஜயோகம் உருவாகி வருகிறது. இந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகத்தின் பலன்கள் எப்படி இருக்கும் என்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 


ரிஷபம்:


ஜோதிட சாஸ்திரப்படி ரிஷப ராசிக்காரர்களின் லக்ன வீட்டில் ராஜயோகம் உருவாகும். இதனால் இவர்கள் தொழிலில் சிறப்பான பலனை அடைவார்கள். வேலையில் முன்னேற்றத்தால் வருமானம் கூடும். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு ஆகியவை கிடைக்கும். கௌரவம் உயரும். வியாபாரிகளுக்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும்.


குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பல நல்ல விஷயங்களுக்கு பணத்தை செலவு செய்வீர்கள். பண வரவு அதிகரிக்கும். இதனால், குடும்ப சூழல் மகிழ்ச்சியாகும்.


மேலும் படிக்க | ஜூலை மாதம் இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் கவனமாக இருக்கணும் 


சிம்மம்:


சிம்மம் ராசிக்கு புதன் மற்றும் சுக்கிரன் சேர்க்கை ராஜயோகத்தை உருவாக்குகிறது. இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும். இதனுடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பும் கிடைக்கும். இந்த பயணங்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். கூட்டு முயற்சியில் தொடங்கும் வேலையில் லாபம் உண்டாகும். முதலீடு செய்வதற்கு இதுவே சிறந்த நேரம். சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் தீரும்.


விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். உங்களின் நிதி நிலை பெரிதும் மேம்படும். புதிய வாகனம் அல்லது சொத்து வாங்குவதற்கான யோகம் தற்போது உண்டாகும்.


குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். கணவன் / மனைவி, குழந்தைகளால் மகிழ்ச்சி பொங்கும். நல்ல செய்திகள் உங்களை வந்து சேரும். மனதில் நிம்மதி நிலவும். 


கும்பம்:


புதனும் சுக்கிரனும் கும்ப ராசியில் ஷஷ மற்றும் மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்குகிறார்கள். இந்த நேரத்தில் உங்கள் வசதிகள் அதிகரிக்கும். வீடு தொடர்பான வேலைகள் முடிவடையும். இந்த காலம் சுப காரியங்களுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும். புதிய வருமான வழிகள் உருவாகும். ராஜயோகத்தின் பலன் காரணமாக உங்கள் அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும்.


அலுவலகம், வீடு என அனைத்து இடங்களிலும் உங்களுக்கு அனுகூலமான செய்திகள் கிடைக்கும். நண்பர்கள் உறவினர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | ஜூலை மாதம் இந்த ராசிகளுக்கு ராஜ யோகம், மகிழ்ச்சி மழையாய் பொழியும்: உங்க ராசி என்ன 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR