ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் வாழ்க்கையின் சில அம்சங்களுடன் தொடர்புடையது மற்றும் அதன் மீது பயனுள்ள விளைவைக் கொண்டிருக்கிறது. அதன்படி  கிரகங்களின் பெயர்ச்சி மற்றும் தலைகீழ் இயக்கத்தின் தாக்கம் 12 ராசியிலும் காணப்படும். மேலும் இந்த மாற்றங்கள் அனைத்தும் மக்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.  அதன்படி சிலருக்கு சுப பலனையும் மற்றும் ஒருசிலருக்கு அசுப பலனையும் தரக்கூடும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவாக புதன் கிரகம் புத்திசாலித்தனம், தர்க்கம், பேச்சு, கணிதம், புத்திசாலித்தனம் மற்றும் நட்பு ஆகியவற்றிற்கு காரணமான கிரகம் என்று கூறப்படுகிறது. தற்போது புதன் ரிஷப ராசியில் பெயர்ச்சியாகி அங்கு இருப்பதால் ஜூலை 2 ஆம் தேதி வரை ரிஷப ராசியில் பயணிப்பார். அந்த வகையில் இந்த நேரத்தில் ​​3 ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமான நேரமாக இருக்கும். இந்த மூன்று அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.


மேலும் படிக்க | செவ்வாய் - சனி கூட்டணி: மே 17 வரை சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய 3 ராசிகள் 


புதன் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்ட மழை பொழிய செய்வார்.


மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு புதனின் பெயர்ச்சி காலம் மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த நேரம் இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயத்தை தரும். எதிர்பாராத இடங்களிலிருந்து உங்களுக்குப் பணம் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணமும் இப்போது கிடைக்கும். தொழில் துறையில் இருப்பவர்களுக்கு பெரிய அளவில் லாபம் கிடைக்கும். அது பெரும் பலனைத் தரும். கூட்டாண்மையில் வேலை செய்பவர்களும் ஆதாயம் அடைவார்கள். எதிரிகள் மீது வெற்றி பெறுவீர்கள். வீரம்-தைரியம் அதிகரிக்கும்.


கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு புதனின் பெயர்ச்சியால் வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிதாக ஏதாவது செய்ய விரும்புபவர்களின் வருமானம் கூடும். கடக ராசியினர் இந்த பொன்னான நேரத்தை பயன்படுத்துக்கொள்ள வேண்டும். சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் பணம் சம்பாதிப்பார்கள். புதிய கார் அல்லது சொத்து வாங்கலாம். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். உறவுமுறைகள் சிறப்பாக இருக்கும்.


சிம்மம்: ரிஷபம் ராசியில் உள்ள புதன், சிம்ம ராசிக்காரர்களுக்கு தொழிலில் நன்மைகளை ஏற்படுத்தி தருவார். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். தற்போதைய பணியில் பதவி உயர்வு-மரியாதை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இடமாற்றமும் நிகழலாம். வணிகர்களுக்கு புதிய உறவுகள் உருவாகும், இது எதிர்காலத்தில் அவர்களுக்கு நன்மைகளைத் தரும். உங்கள் வேலை செய்யும் விதத்தில் முன்னேற்றம் ஏற்படும். அதனால் மக்கள் உங்களைப் புகழ்வார்கள்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களுக்கு காதல் கைகூடும், பல அதிசயங்கள் நடக்கும் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR