செவ்வாய் - சனி கூட்டணி: மே 17 வரை சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்

கும்ப ராசியில் செவ்வாயும் சனியும் இணைவதால் இரட்டை யோகம் உருவாகி வருகிறது. இந்த யோகம் சில ராசிக்காரர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 4, 2022, 03:04 PM IST
செவ்வாய் - சனி கூட்டணி: மே 17 வரை சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய 3 ராசிகள் title=

செவ்வாய் மற்றும் சனி கிரகங்கள் இடையே பகை உணர்வு உள்ளது என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஏப்ரல் 29ம் தேதி முதல் மே 17ம் தேதி வரை செவ்வாயும் சனியும் ஒரே ராசியில் ஒன்றாக இணைகிறது.  ஏப்ரல் 29ம் தேதி காலை 09.57 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார். செவ்வாய் கிரகம் ஏற்கனவே இந்த ராசியில் அமர்ந்திருக்கிறது. கும்ப ராசியில் செவ்வாயும் சனியும் இணைவதால் இரட்டை யோகம் உருவாகி வருகிறது. 

இந்த யோகம் ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் அசுபமாக கருதப்படுகிறது. இந்த சேர்க்கையின் பலன் மூன்று ராசிக்காரர்களுக்கு அதிகமாக இருக்கும், இதனால் இந்த ராசிக்காரர்கள் சிரமங்களை சந்திக்க நேரிடும். எனவே மே 17 வரை சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய  3 ராசிகளை பற்றி அறிந்து கொள்ளலாம். 

கடகம் 

கடக ராசிக்கு எட்டாம் வீட்டில் சனி - செவ்வாய் சேர்க்கை உருவாகும். எட்டாவது வீட்டு, வயது, ஆபத்து மற்றும் விபத்து ஆகியவற்றின் வீடாக கருதப்படுகிறது. எனவே, இந்த ராசிக்காரர்களுக்கு பாதிப்பு ஏற்படும். அவர்கள் சர்வ ஜாக்கிரதையுடன் செயல்பட்டு பணியிடத்தில் எந்த வகையான ஆபத்தையும் தவிர்க்க வேண்டும். இந்த இணைப்பு ஒருவித விபத்தை குறிக்கிறது.

மேலும் படிக்க | குரு - சுக்கிரன் கூட்டணியினால் இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தான்

கன்னி

கன்னி ராசிக்கு ஆறாம் வீட்டில் கன்னி-சனி-செவ்வாய் இணைகிறது. இந்த வீடு கடன், எதிரிகள், ஆரோக்கியம் மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றுக்கான வீடு. எனவே, இந்த நேரத்தில் உங்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சாப்பிடும் விஷயத்தில் கவனமாக இருக்கவும். செலவும் அதிகரிக்கலாம்.

கும்பம்

கும்ப ராசிக்கு சனி-செவ்வாய் இணைவதால் கும்ப ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் ஏற்படும். இந்த நேரத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கும்ப ராசிக்காரர்களுக்கு கோபம், எரிச்சல் போன்ற பாதிப்புகள் இருக்கும். வாழ்க்கைத் துணை மற்றும் சக ஊழியருடன் தகராறு ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது.

செவ்வாய்-சனி இணைப்பு பாதிப்பை தடுக்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்:

1. செவ்வாய் மற்றும் சனியின் சேர்க்கையால் பாதிக்கப்பட்டவர்கள் செவ்வாய்கிழமை அனுமனை வணங்க வேண்டும்.

2. சனி, செவ்வாய் சாந்திக்காக மந்திரங்கள் ஜபிக்க வேண்டும்.

3. இந்த சேர்க்கையால் பாதிக்கப்பட்டவர்கள் சனி மற்றும் செவ்வாய் கிழமைகளுக்கு உகந்த பொருட்களை தானம் செய்ய வேண்டும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Astro: அனைவரையும் காந்தம் போல் வசீகரிக்கும் திறன் பெற்ற ‘3’ ராசிக்காரர்கள்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News