சனி பகவானுக்கு பிடித்த ராசிகள்: சனி பகவான் நீதியின் கடவுளாக பார்க்கபப்டுகிறார். மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அவர் பலன்களை அளிக்கிறார். சனி பகவானின் அருள் ஒருவர் மீது இருந்தால், அவருக்கு உலகின் அனைத்து வித இன்பங்களும் கிடைக்கும். அவர் எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவார். அதே சமயம் அவரது கோவப்பார்வை ஒருவர் மீது பட்டால் அவர் பல துன்பங்களை அனுபவிக்க வேண்டி வரலாம். சனிக்கிழமையன்று சனிபகவானை வழிபடுவது நல்லதாக கருதபடுகின்றது. சனிக்கிழமைகளில் தன்னை வணங்குபவர்கள் மீது சனிபகவான் தனது ஆசீர்வாதத்தைப் பொழிவார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவாக சனி பகவான் கொடூரமான கிரகமாக பார்க்கப்படுகிறார். ஆனால், அது உண்மையல்ல. சொல்லப்போனால், அவர் கர்ம வினைகளுக்கு ஏற்ற தீய பலன்களை கிள்ளியும் நற்பலன்களை அள்ளியும் கொடுப்பார். சனி பகவான் பாரபட்சம் இல்லாமல் அனைவர் மீதும் தனது அருளை பொழிகிறார். எனினும், சில ராசிக்காரர்கள் மீது சனி பகவான் சிறப்பு கவனம் செலுத்தி அவர்கள் மீது அருள் மழை பொழிகிறார். இவர்கள் சனி பகவானின் செல்லப்பிள்ளைகளாக பார்க்கப்படுகிறார்கள். சனி பகவான் எப்போதும் இவர்களை அதிகமாக கஷ்டப்படுத்த மாட்டார். இவர்கள் சனி பகவானுக்கு விருப்பமான ராசிகளாக இருப்பவர்கள். அந்த அதிஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 


சனி பகவானுக்கு பிடித்த ராசிகள்


கடகம்


சனி பகவானின் சிறப்பு ஆசீர்வாதங்கள் கடக ராசிக்காரர்களுக்கு இருப்பதாக கருதப்படுகிறது. சனி அவர்களுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தமாட்டார். கடக ராசிக்காரர்களுக்கு அவர் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருகிறார். சனியின் அருளால் இவர்கள் இரவும் பகலுமாக உழைத்து பன்மடங்காக முன்னேற்றம் அடைகிறார்கள்.


துலா ராசி


ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு தெய்வத்திற்கும் பிடித்தமான சில ராசிகள் உள்ளன. அவை குறிப்பாக அந்த ராசிக்காரர்களிடம் மிகவும் அன்பாக இருக்கின்றன. சனிபகவானுக்குப் பிடித்தமான ராசிகளில் துலாம் ராசிக்காரர்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். இந்த ராசி சனி பகவானின் உச்ச ராசியாக கருதப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், சனி பகவான் துலாம் ராசிக்காரர்களிடம் எப்போதும் கருணை பாவத்துடன் இருப்பார். அவர்கள் மீது எப்போதும் தன் ஆசீர்வாதத்தை பொழிவார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் ஏதேனும் சிரமம் வந்தால், அதனால் நீண்ட காலத்துக்கு போராட வேண்டி இருக்காது. 


மேலும் படிக்க | மாத ராசிபலன்: ஆகஸ்ட் மாதம் இந்த ராசிகளுக்கு அட்டகாசமாய் இருக்கும், பண வரவு அதிகரிக்கும்!!


மகர ராசி


ஜோதிடத்தின்படி, மகர ராசிக்காரர்கள் மீது சனி பகவான் தனது சிறப்பு ஆசிகளை பொழிகிறார். இந்த ராசிக்காரர்கள் மீது சனி பகவான் தனது அசுப பலன்களின் தாக்கம் பட அனுமதிப்பதில்லை. மகர ராசியின் அதிபதி சனி பகவான்  என்பதே இதற்குக் காரணம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சனிபகவான் ஜாதகத்தில் சுப ஸ்தானத்தில் இருக்கும் போது இந்த ராசிக்காரர்கள் அனைத்துத் துறைகளிலும் சுப பலன்களைப் பெறுகிறார்கள். 


கும்ப ராசி


இந்த விஷயத்தில் கும்ப ராசிக்காரர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். இந்த ராசிக்காரர்கள் மீது சனி பகவான் பல வித ஆசீர்வாதங்களைப் பொழிகிறார். சனியின் விசேஷ பார்வை இந்த ராசிக்காரர்கள் மீது எப்போதும் இருக்கும். இதனுடன், சனி பகவானின் அருளால் கும்ப ராசிக்காரர்கள் தாங்கள் எடுத்த அனைத்து வேலைகளிலும் வெற்றி பெறுகிறார்கள். சனி பகவான் கும்ப ராசிக்காரர்களிடம் மிகவும் அன்பாக நடந்துகொள்கிறார். சனிபகவானின் அருளால் இவர்களுக்கு எப்போதும் அதிகப்படியான பண வரவு இருக்கும். 


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | கும்பத்தில் இருக்கும் சனி பகவானால் 2 ஆண்டுகளில் 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ