திருவள்ளுவர் அடுத்த மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  கீழச்சேரி ஊராட்சி அரசு நிதி உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி விடுதியில் தங்கி 12ம் வகுப்பு படிக்கும் திருத்தணி தக்களூர் கிராமத்தைச் சேர்ந்த  விவசாயி பூசனம் முருகம்மாள் அவரது மகளான மாணவி சரளா, 17 இன்று விடுதியில் இருந்து  காலை வழக்கம் போல் பள்ளிக்குச் செல்ல சீருடை அணிந்து சக நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பின்னர் சக நண்பர்கள் உணவு அருந்த சென்று விட்டனர் அப்போது தனியாக இருந்த மாணவி சரளா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் இந்த பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்த திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்ட் சந்திர தாசன் சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


மேலும் மாணவி தற்கொலை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிசி கல்யாண் திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் வருவாய்த்துறையினர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி மாணவியின் இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறுகிறதா?


சமீபத்தில் கள்ளக்குறிச்சி தற்கொலை சம்பவம், தமிழ்நாட்டை உலுக்கிய நிலையில், திருவள்ளூர் அடுத்த கீழச்சேரியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூரில் இருக்கும் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி, கடந்த 13-ந்தேதி அதிகாலை நேரத்தில், அவர் தங்கி இருந்த விடுதி கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அதை அடுத்த நடந்த போராட்டம் மற்றும் வன்முறை தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக வெளியான பகீர் தகவல்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ