சென்னை : பருவமழை காரணமாக பல இடங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது.  அதிலும் குறிப்பாக சென்னை தண்ணீரில் தத்தளித்து வருகிறது. ஓயாமல் பெய்து வரும் மழையால் மக்கள் பல இன்னல்களை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல சுரங்கப்பாதைகள் முற்றிலுமாக மழை வெள்ளத்தினால் மூழ்கிவிட்டன. பல வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை மோசமடைந்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் தமிழகத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தண்டவாளங்களில் தேங்கிய மழை நீரால் புறநகர் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து வெள்ள பாதிப்புகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். இந்நிலையில் இரவு முழுவதும் விடாமல் பெய்த கனமழையால் வேளச்சேரியின் பெரும்பாலான பகுதிகளில் இடுப்பளவிற்கு மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காணப்படுகிறது. இதனால் சமீபத்தில் திறக்கப்பட்ட வேளச்சேரி மேம்பாலத்தின் மீது கார் உரிமையாளர்கள் தங்களது கார்களை பத்திரமாக நிறுத்தி வைத்துள்ளனர்.




ஏனெனில் 2015-ம் ஆண்டின் கனமழையின் காரணமாக வாகனங்கள் அனைத்தும் மழைநீரில் மிதந்து சேதமடைந்தது.nஅதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாகன ஓட்டிகள் தங்களின் கார்களை மேம்பாலத்தில் பத்திரமாக பார்க்கிங் செய்துவிட்டனர். மேலும் இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, அவர்கள் கார்களை பாதுகாக்க இதனை செய்திருந்தாலும், இந்த நிகழ்வால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் மேலும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.


ALSO READ சென்னை சென்ட்ரலுக்கு வரும் அனைத்து ரயில்களும் நிறுத்தம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR